![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 40 வினை ஓட |
![]() | ![]() | தமிழில் பொருள் எழுதியது 'திருப்புகழ் அடிமை' திரு சு. நடராஜன் (சென்னை) Meanings in Tamil by 'Thiruppugazh Adimai' Thiru S Nadarajan (Chennai) | PDF வடிவத்தில் ![]() ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 40 ... வினை ஓட விடும் (வேல் மறாவதிருப்பதே நமது வேலை) வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன் மனையோடு தியங்கி மயங்கிடவோ? சுனையோடு, அருவித் துறையோடு, பசுந் தினையோடு, இதணோடு திரிந்தவனே. ......... பதவுரை ......... சுனையோடு ... வள்ளி மலையில் சுனைகளிடத்தும், அருவித் துறையோடு ... மலை அருவிகள் விழுமிடத்தும், பசும் தினையோடு ... பசுமை நிறங்கொண்ட தினைப் புனத்திடத்தும், இதணோடு ... பரணிடத்தும், திரிந்தவனே ... வள்ளிப் பிராட்டிக்கு அருள் செய்யும் பொருட்டு சுற்றித் திரிந்த பெருமானே, வினை ஓட விடும் ... ஆன்மாக்களின் இருவினைகளையும் ஓடச் செய்யும், கதிர் வேல் மறவேன் ... ஞான ஒளி வீசுகின்ற வேலாயுதத்தை ஒருகாலும் மறக்க மாட்டேன், மனையோடு தியங்கி மயங்கிடவோ ... இல் வாழ்வில் கலக்கம் கொண்டு மயங்கி அழியலாமோ? ......... பொழிப்புரை ......... வள்ளிமலைச் சாரலில் உள்ள சுனை இடத்தும், அருவி இடத்தும், பசுமையான தினைப் புனத்திடத்தும் வள்ளிப் பிராட்டியார் நின்றுகொண்டு கவண் வீசிய பரணிபடத்திலும் அலைந்த முருகா, இருவினைகளையும் ஒழிக்கும் பேராற்றல் மிக்க ஞானச் சுடர் வீசும் வேலாயுதத்தை மறக்காதவானகிய நான், சம்சார பந்தத்தோடு கலக்கம்கொண்டு மயங்கி உழல்வது தகுமோ? ......... விளக்கவுரை ......... அருவிகள் சுனைகள் போன்ற இடங்களில் திரிந்தது, முருகன் பக்குவ ஆன்மாக்களைத் தேடி ஆட்கொள்ளுவதில் உள்ள தீவிரமான அவசரத்தையும் கருணையையும் காண்பிக்கிறது. இக்கருத்தை, மாசிலடி யார்கள் வாழ்கின்ற வூர்சென்று தேடிவிளை யாடி யேயங்க னேநின்று வாழுமயில் வீர னேசெந்தில் வாழ்கின்ற பெருமாளே ... என்கிற 'மூளும் வினை' எனத் தொடங்கும் திருச்செந்தூர்த் திருப்புகழில் காணலாம். (பாடல் 94). வள்ளி திருமணத்தின் உட்பொருள், சுந்தரவல்லி மான் வயிற்றில் உதித்தவள். சைவ சித்தாந்த பரிபாஷையில், மான் என்பது பிரகிருதி மாயையைக் குறிக்கும். சிவ முனிவனாகிய பிரம்மத்துடன் மானாகிய பிரகிருதி மாயை கலந்ததில் உதித்தவள் வள்ளி என்கிற ஜீவ சக்தியாகிய ஆன்மா. 1. வேடர்கள் ... ஞான கர்மேந்திரியங்கள் (மெய், வாய், கண், மூக்கு, செவி), 2. வேடத் தலைவன் ... மனம், 3. தினைப்புனம் ... போகத்திற்கு இருப்பிடமாகிய ஸ்தூல சரீரம், 4. தினை ... பிரபஞ்ச விஷய சுகங்கள், 5. பரண் ... உயரத்தில் கட்டப்படுவது. இவை விஷய சுகங்களுக்கு மேற்பட்டதால் மோட்சத்தை அவாவுகின்ற நிலை. அதாவது விஷய சுகங்களின் பற்று நீங்கி, இறைவனை அடைய வெளிப்படும் தீவிர தாகம். இதை வடமொழியில் 'முச்சுத்வம்' என்பர். 6. கவண் ... அந்தக் கரணங்கள் (மனம், புத்தி, சித்தம்), 7. கல் ... வைராக்கியம், 8. பறவைகள் ... இந்திரிய சுகங்களை அனுபவிக்க பறந்து ஓடுகின்ற ஐம்புல விருத்திகள். .. கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி கற்கவ ணிட்டெறி தினைகாவல் கற்றகு றத்தி .. ... என்பார் 'பத்தர் கணப்ரிய' எனத் தொடங்கும் திருச்செங்கோட்டு திருப்புகழில் (பாடல் 602). சுருங்கச் சொன்னால் ஒரு ஜீவன் தனது உண்மையான ஆத்ம சொரூபத்தை நன்கு அறிந்து, இந்திரிய சுகங்களில் செல்லும் ஐம்புல ஆசைகளை அடக்கி, வைராக்கியத்தால் மனதை பரம் பொருளாகிய பிரம்ம விருத்தத்தில் செலுத்தி, பக்குவம் அடையும்பொழுது, இறைவனே வலிய சென்று, அந்த வைராக்கியத்தை நன்கு பரிசோதனை செய்து (வேடனாய், வேங்கையாய், விருத்தனாய் வருவது வள்ளி பிராட்டிக்காக), கடைசியில் தனது உண்மைச் சொரூபத்தைக் காட்டி ஆட்கொள்வான் என்பதே வள்ளி கல்யாண தத்துவம். மூன்று ஏடனைகளும் ஒழிவதற்கு வினை ஒழிய வேண்டும். இதற்கு சாதனம் ஞானமாகிய வேல். இந்த வேலாயுதத்தைப் பற்றிக்கொண்டால் மனையோடு தியங்கி மயங்கும் அஞ்ஞானம் ஒழியும். இதற்கு உதாரணம் வள்ளி பிராட்டி. வள்ளி புனத்தில் முருகப் பெருமான் மற்ற நல்ல மரங்களாக ஒருவெடுக்காமல் காட்டு மரமாகிய வேங்கையின் உருவெடுத்தது ஏன்? இம் மரத்தின் பூக்கும் காலத்தில் அதைப் பார்த்தால் அதன் கிளையில் வேங்கைப் புலிகள் படுத்திருப்பதுபோல் தோற்றம் தரும். பயத்தை விட்டு உற்று நோக்கினால் மரத்தின் உண்மைச் சொரூபம் தெளிவாகிவிடும். அதுபோல், உலகில் காணப்படும் உருவ பேதங்கள் மனிதனை மயக்கி, பயப்படச் செய்கின்றன. விவேகத்தை உபயோகித்து ஆராய்ந்து பார்த்தால் சலனமில்லாத, விகாரமில்லாத, பேதமில்லாத ஒரே பொருள்தான் மாயையினால் பல்வேறு உருவங்களாக காட்சி அளிக்கிறது. இதுவே முருகன் வேங்கை மரமானதின் தத்துவம். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.680 WIKI_urai Song number: 40 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.10mb to download |
![]() | 'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.27mb to download |
![]() | சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.46mb to download |
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page | ![]() |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |