![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 39 மாவேழ் சனனம் |
![]() | ![]() | தமிழில் பொருள் எழுதியது 'திருப்புகழ் அடிமை' திரு சு. நடராஜன் (சென்னை) Meanings in Tamil by 'Thiruppugazh Adimai' Thiru S Nadarajan (Chennai) | PDF வடிவத்தில் ![]() ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 39 ... மா ஏழ் சனனம் (பிறப்பையும் ஆசையையும் நீக்கு முருகா) மாஏழ் சனனம் கெட மாயைவிடா மூஏடணை என்று முடிந்திடுமோ கோவே, குறமின் கொடிதோள் புணரும் தேவே சிவ சங்கர தேசிகனே. ......... பதவுரை ......... கோவே ... மன்னனே, குறமின் கொடி தோள் புணரும் தேவே ... வேடர் குலத்தில் உதித்த வள்ளிப் பிராட்டியின் திருத் தோள்களை தழுவும் தெய்வீகனே, சிவ சங்கர தேசிகனே ... மங்கல மூர்த்தியும் சுகத்தைத் தருபவருமான சிவ மூர்த்தியின் குருநாதனே, மா ஏழ் சனனம் கெட ... ஏழு வகையான எனது பிறவிகள் தொலையுமாறு, மாயை விடா ... மாயையிலிருந்தும் நீங்காத, மூ ஏடணை ... மூன்று ஆசைகளும், என்று முடிந்திடுமோ ... எப்போதுதான் அடியேனை பற்றாது நீங்குமோ? ......... பொழிப்புரை ......... இறைவனே, குறக் குலத்தில் அவதரித்த மின்னல் கொடிபோன்ற வள்ளியின் புயங்களைத் தழுவுகின்ற தெய்வமே, சிவபெருமானுக்கு குருவானவனே, பிரமாண்டமான ஏழு வகையான பிறப்பையும் நீக்கி, பிரகிருதி மாயையோடு சம்பந்தப்பட்ட மூன்று வகையான ஆசைகளும் எப்போது அடியேன் ஓடுங்கப் பெறுவேனோ? ......... விளக்கவுரை ......... சகல நிலையில் இருக்கும் உயிர்களை தம்முள் ஒடுக்கி இளைப்பாறும்படியும், கேவல நிலையில் வைப்பதும், சுத்த நிலையில் தன்னோடு சேர்த்துக் கொள்வதும் உயிர்களுக்கு செய்யும் உபகாரம். ஆதலால் அவைகளைச் செய்பவன், மங்கலத்தைச் செய்பவன் ஆகிறான். ஆதலால் அப்படிப்பட்டவருக்கு 'சிவ சங்கரன்' என்று பெயர். சங்கரன்' என்றால் 'சம்காரம் செய்பவன்' என்ற தவறான பொருள் கொள்ளக் கூடாது. 'சங்கரன்' என்ற வட மொழிச் சொல், 'சம் + கரோதி' எனப் பிரிந்து 'சுபத்தைச் செய்கிறவன்' என்று பொருள் கொள்ளப்படும். அப்பேற்பட்ட சிவனுக்குக் குருவாகும் முருகனின் பெருமையை சொல்லி முடியுமா? 'மா' என்ற எழுத்துக்கு 'பெரிய' என்ற பொருளுமின்றி, 'மரணம்', வெறுப்பு', 'அல்பம்' முதலிய பல பொருள்கள் உண்டு. இவை அனைத்தும் பிறவிக்கு பொருந்துதல் காண்க. தேவர், மனிதர், மிருகம், ஊர்வன, நீர் வாழ்வன, பட்சி, தாவரம் என்பவை ஏழு பிறவிகள். 'மண்', 'பெண்', 'பொன்' என்றின் மேலும் மக்கள் கொள்ளும் ஆசைக்குக் காரணம் 'பிரகிருதி மாயை'. இம் மூவாசைகளும் எப்போது முடியுமோ அப்போதுதான் பிறப்பு - இறப்பு' என்கிற சக்கரமும் நின்று போகும். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.679 pg 4.680 WIKI_urai Song number: 39 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
![]() | 'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
![]() | சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |