Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அநுபூதி
51 செய்யுட்கள்

Sri AruNagirinAthar's
Kandhar AnubUdhi
51 verses

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி  - 33  சிந்தா ஆகுல
 
Kandhar Anuboothi sindhA Agulam with meanings by Thiru S. NatarajanThiru S Nadarajan    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை'
    திரு சு. நடராஜன் (சென்னை)

   Meanings in Tamil by
   'Thiruppugazh Adimai'
   Thiru S Nadarajan (Chennai)

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 33 ... சிந்தாகுல

(பந்தத்தின்று எனைக் காவாய்)

சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
விந்தாடவி என்று விடப் பெறுவேன்
மந்தாகினி தந்த வரோதயனே
கந்தா, முருகா, கருணாகரனே.

......... பதவுரை .........

மந்தாகினி தந்த ... கங்கா நதி தாங்கிக்கொண்டு வந்து கொடுத்த,

வர உதயனே ... தேவர்கள் வேண்டியபடி சிவ பெருமானிடத்தில்
தோன்றியவரே,

கந்தா ... கந்தப் பெருமானே,

முருகா ... முருகப் பெருமானே,

கருணாகரனே ... கருணைக்கு இருப்பிடமானவனே,

சிந்தை ஆகுலம் ... மனதில் துன்பத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கும்,

இல்லொடு செல்வம் எனும் ... மனைவி செல்வம் எனப்படும்,

விந்தா அடவி ... விந்திய மலைக் காடுபோன்ற இத் துன்பத்தை,

என்று விடப் பெறுவேன்? ... அடியேன் என்று விடுவேன்?

......... பொழிப்புரை .........

கங்கை ஏந்திக் கொண்டுவந்து அளித்து, தேவர்கள் பெற்ற வரத்தின்
நிமித்தமாக அவதாரம் செய்தவனே. மனச் சஞ்சலத்தைக் கொடுக்கும்
சம்சார வாழ்க்கை, ஐஸ்வரியம் என்கிற விசித்திரமான காட்டில் வசிப்பதை
எப்போது நீங்கப் பெறுவேன்?

......... விளக்கவுரை .........

மனதிற்கு இசைந்த அழகிய மனைவி மக்களுடன் நடத்தும்
இல்வாழ்க்கையை எப்படி சிந்தாகுல இல் என அருணகிரியார் கூறலாம்
என சிலர் எண்ணலாம். எவ்வளவுதான் மனைவியும் மக்களும்
சுற்றத்தாரும் மனதிற்கு இசைய வாய்க்கப் பெற்றாலும் முடிவில்
அவர்களால் கிடைத்த சுகத்தைக் காட்டிலும் அவர்களைக் காப்பாற்ற
நாம் பட்ட கஷ்டமே அதிகம் என்பது கண்கூடு. மனைவி என்கிற
பந்தம் நீண்டுகொண்டேபோய் மக்கள், பேரன் பேத்திகள் என
வளர்ந்து கொண்டே போகும். இதையே அருணகிரியார்,

   இவ்வகையாவுங் கிடைத்துக் கிரஹவாசி யாகிய
   மயக்கக் கடலாடி நீடிய
   கிளைக்குப் பரிபால னாயுயி ரவமே போம்

... என்கிறார் கதிர்காமத் திருப்புகழில் ('உடுக்கத்துகில்' - பாடல் 638).

விவேக சிந்தாமணியில் ஒரு பாடல்:

   ஆ ஈன மழை பொழிய, இல்லம் வீழ,
   அகத்தடியாள் மெய் நோவ, அடிமை சாக
   மா ஈரம் போகுதென்று விதை கொண்டு ஓட
   வழியில் கடன்காரர் மறித்துக் கொள்ள
   கோ வேந்தர் உழுது உண்ட கடமையை கேட்க
   குருக்கள் தட்சணைக்கு வழியில் நிற்க
   பா வாணர் கவிபாடு பரிசில் கேட்க
   பாவி மகன் படும் துயரம் பார்க்க ஒண்ணாதே.

செல்வத்தைத் தேடுவதிலும் கஷ்டம். பின் அதைக் காப்பாற்றுவதிலும்
கஷ்டம். விந்தாடவி என்பதற்கு வேறு ஒரு பொருள். விந்திய மலைக்
காட்டில் பல துஷ்டர்களும் கொடிய மிருகங்களும் சஞ்சரிப்பது போல்
இல் வாழ்க்கையிலும் சொல்லொணா பல இன்னல்கள் நிரம்பி
இருப்பதால் அதை விந்தாடவி என்கிறார்.

'குருவி என' என ஆரம்பிக்கும் திருத்தணி திருப்புகழைப் பார்க்க.
(பாடல் 263)

பரமசிவனின் ஞானமும், அவனுடைய கருணையின் அம்சமான
கங்கையையும் சேர்ந்து தேவர்களைக் காக்கத் தோன்றிய வடிவம்
தான் முருகன். ஆதலால் அவனை மந்தாகினியின் மைந்தனே,
காருணாகரனே என விளிக்கிறார். ஆகையால் முருகன் ஞானமும்
கருணையும் சேர்ந்த வடிவினன். நமக்கு கருணையுடன் நித்ய
அநித்ய வஸ்த்துக்களை பிரித்துக் காணும் ஞானத்தைத் தந்து,
நம்மை பரகதியில் சேர்ப்பான்.

கந்தன் என்கிற பதத்திற்கு பல பொருட்கள் இருந்தாலும்,
'வற்றடித்தல்' அதாவது புறப்பகைவர்களான அசுரர்களை
அழிப்பதுபோல் ஆன்ம லட்சணத்திற்கு விரோதிகளான காமக்
குரோதம் முதலிய அகப் பகைவர்களை சிதறடிப்பவன் கந்தன்.
அதை உணர்த்தும் வகையில் முருகனைக் கந்தா என அழைக்கிறார்.
go to top
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.672  pg 4.673 
 WIKI_urai Song number: 33 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
0.11mb
 to download 
Malai Mandir Ishwinderjit Singh
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங்

'MalaiMandir' Thiru Ishwinderjit Singh
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
0.27mb
 to download 
Chennai Revathy Sankaran
சென்னை ரேவதி சங்கரன்

Revathy Sankaran (Chennai)
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
0.47mb
 to download 
 51 செய்யுட்கள்  51 செய்யுட்கள் (ஒலிவடிவத்துடன்) 
52-101 செய்யுட்கள்  52-101 செய்யுட்கள் (ஒலிவடிவத்துடன்) 
 பொருள் - பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா)  SS
 51 verses - English Transliteration   51 verses (with audio)
 52-101 verses - English Transliteration   52-101 verses (with audio)
 Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia)  SS
 அகரவரிசைப் பட்டியலுக்கு   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 For Alphabetical List   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar Anuboothi - Verse 33 sindhA Agulam




   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]