![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 1 ஆடும் பரிவேல் |
![]() | ![]() | தமிழில் பொருள் எழுதியது 'திருப்புகழ் அடிமை' திரு சு. நடராஜன் (சென்னை) Meanings in Tamil by 'Thiruppugazh Adimai' Thiru S Nadarajan (Chennai) | PDF வடிவத்தில் ![]() ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 1 ... ஆடும் பரி, வேல் ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப் பாடும் பணியே பணியா அருள்வாய் தேடும் கயமா முகனைச் செருவில் சாடும் தனி யானைச் சகோதரனே. ......... பதவுரை ......... தேடும் ... அக்ரமாக சான்றோர்களை அழிப்பதற்காக தேடுகின்ற, கயமாமுகனை ... கஜமுகாசுரனை, செருவில் சாடும் ... போர் செய்து அழித்த, தனியானை ... ஒப்பற்ற விநாயகப் பெருமானின், சகோதரனே ... தம்பியே, ஆடும் பரி ... பிரணவ நடனமாடும் மயில், வேல் ... உன்னுடைய ஞானா சக்தியாகிய வேலாயுதம், அணி சேவல் ... அடியார்களுக்கு முருகனின் அருளைத் தெரிவிக்கின்ற சேவல் (இவை மூன்றையும்) பாடும் பணியே ... துதித்துப் பாடுகின்ற தொழிலையே பணியா அருள்வாய் ... என்னுடைய கடமையாக நீ அருள வேண்டும். ......... விளக்கவுரை ......... ஆடும் பரி ... முருகன் கோவிலில் முதலில் நமக்கு காட்சி கொடுப்பது மயில் வாகனம். மந்திர நூல்கள் பிரணவத்தில் ஆரம்பமாவது நமது மரபு. .. ஓம் ஹரி ஓம் .. ஞானசம்பந்தர் தாம் பாடிய தேவாரத்தை தொடங்கும்பொழுது பிரணவத்தை நேரடியாகச் சொல்லாமல் மறைத்து அருளி ஒரு புதிய முறையை கையாண்டுள்ளார். பிரணவ அட்சரமாகிய 'ஓ' காரத்தை தகராகாச குறிப்பாபாகிய 'த' மெய்யோடு சேர்த்து 'தோடுடைய ... ' என ஆரம்பிக்கிறார். புகலியில் வித்தகர் போல' தானும் பாடவேண்டும் என்ற கொள்கையை அருணகிரியாரும் கடைபிடித்து அதே முறையை பின்பற்றி, தன்னுடைய மந்திர நூலான அநுபூதியின் ஆரம்பத்தில் பிரணவத்தை நேரடியாகக் கூறாமல் நுட்பமாகக் கையாண்டிருக்கிறார். பிரணவத்தின் பகுதிகளான அகர உகர மகாரங்களை 'ஆடும்' என்கிற சொல்லில் வைத்திருக்கும் மதிநுட்பம் வியக்கத்தக்கது. 'பரி' ஏன் போட வேண்டும்? 'ஆடும் மயில்' என்றால் இலக்கண விதிப்படி 'ம' ஓசை கெட்டு 'ஆடு மயில்' என்று ஆகிவிடும். ஆடும் குதிரை என்றாலோ 'ம' விற்கு பதில் 'ங' சப்தம் வந்துவிடும். 'ஆடும் பரி' என்றால் 'ப' காரத்திற்கு முன்பாக 'ம' காரம் நிலைபெற்று, 'அ உ ம்' மூன்றும் திகழ்கின்றன. ஓசையில் 'ஓ' காரத்தைக் குறிப்பது மட்டுமன்றி பொருளிலும் பிரணவம் வருகிறது. .. ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்டது ஆடு மயில் ... என்ற 'வாதினை அடர்ந்த' (பாடல் 1318) பழமுதிர்ச்சோலை - திருப்புகழைக் கவனிக்கவும். ஒரு காலைத் தூக்கி தோகையை விரித்து ஆடும் மயிலின் தோற்றம் தமிழில் 'ஓ' எழுத்தை நினைவூட்டும். சேவலின் நாதமும் 'ஓ' காரத்தை ஒத்திருக்கிறது. மயில் என்பது பிந்து. சேவல் என்பது நாதம். இவை இரண்டையும் கண்டறிந்து அனுபவிக்க ஞானம் தேவை. வேல் ஞான சொரூபம். ஆதலால் பிரணவத்தின் பொருளை அறியவும் அதன் நாதத்தை சுய அனுபவமாக அனுபவிக்கவும் தனக்கு வரமாகப் பெற அவற்றை எப்போதுமே பாடிக்கொண்டிருப்பதையே பாடும் பணியையே வரமாகக் கேட்கிறார். முருகனாலேயே பிரணவத்தின் பொருளைக் கூறமுடியும். அவனே அதன் உட்பொருளாக இருப்பதை, .. ஓங்காரத்துள் உள் ஒளிக்குள்ளே முருகன் உருக்கண்டு .. என்ற கந்தர் அலங்காரச் செய்யுளில் பார்க்கலாம். மேலும் அவன் பிரணவ சொரூபியான விநாயகரின் சகோதரன். சான்றோர்களைச் தேடிச் சென்று அவர்களுக்கு பெரும் தீங்கு இழைத்து வந்த கஜமாசுரனை வென்றவர் விநாயகர் என்றும் குறிப்பிடுகிறார். கடைசி இரு வரிகளிலும் காணப்படும் ஒரு நுட்பத்தைக் கவனிக்கவேண்டும். அழித்தவருக்கும் யானை முகம். அழிக்கப்பட்டவருக்கும் யானை முகம். இருவருக்கும் உள்ள வேற்றுமை, விநாயகர் ஒளிமயமான குணங்களின் பிம்பம். கயமுகாசுரனோ அனாத்ம விருத்திகளான தாமச குணங்களின் பிம்பம். விநாயகர் கயமாமுகனைக் கொல்லவில்லை என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். அவனுடைய அசுர குணங்களை நீக்கி, தன்னுடைய பாதத் தொண்டனாக மாற்றி, தன் திருவடி நிழலில் மூஞ்சுராக வைத்துள்ளார். ஆகையால் நாமும் அந்தக் கணபதியின் அருளால் பிரபஞ்ச மாயையையும் நம்முடைய அசுர குணங்களையும் மாற்றி, முருகன் அருளால் பிரணவ உபதேசமாகிய ஆத்ம ஞானத்தை பெறவேண்டும் என்பதே இப் பாட்டின் நுண் பொருளாகும். ......... குறிப்புக்கள் ......... 1. சேவல் என்ற சொல்லுக்கு 'காவல்' அதாவது துணை என்ற ஒரு பொருளும் உண்டு. 'ஆடும் பரி வேல் அணி சேவல்' என்பதன் நுண் பொருள் 'மயிலும் வேலும் துணை' என்பதே. வேலும் மயிலும் துணை என்பது மகா மந்திரமாகும். 2. பரிக்கு ஆடும் பரி என்றும், சேவலுக்கு அணிசேவல் என்று கூறி வேலுக்கு, எந்த அடைமொழியும் கூறாததற்கு என்ன காரணம்? வேல் பரிபூரண ஞானத்தின் வடிவம். அதற்கு எந்த அடை மொழியும் தேவையில்லை என்பது தெரியவருகிறது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.631 pg 4.632 pg 4.633 pg 4.634 WIKI_urai Song number: 1 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.12mb to download |
![]() | 'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.28mb to download |
![]() | சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.40mb to download |
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page | ![]() |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |