![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 2 உல்லாச நிராகுலம் |
![]() | ![]() | தமிழில் பொருள் எழுதியது 'திருப்புகழ் அடிமை' திரு சு. நடராஜன் (சென்னை) Meanings in Tamil by 'Thiruppugazh Adimai' Thiru S Nadarajan (Chennai) | PDF வடிவத்தில் ![]() ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 2 ... உல்லாச, நிராகுல உல்லாச, நிராகுல, யோக இதச் சல்லாப, விநோதனும் நீ அலையோ? எல்லாம் அற, என்னை இழந்த நலம் சொல்லாய், முருகா சுரபூ பதியே. ......... பதவுரை ......... உல்லாச ... மங்காத உள்ளக் களிப்பும், நிராகுல ... துன்பமற்ற நிலையும், யோக ... யோக சொரூபனும், இத ... நன்மை பயப்பவனும், சல்லாப விநோதனும் ... அடியார்களிடம் இனிமையாகவே பேசி திருவிளையாடல் புரிபவனும், நீ அலையோ ... நீ தானே முருகா, எல்லாம் அற ... உரை அவிழ உணர்வு அவிழ உயிர் அவிழ, என்னை இழந்த நலம் ... நான் எனும் ஜீவ போதம் இழந்து அனுபவிக்கும் பேரின்ப நிலையை, சொல்லாய் ... மற்றவர்களுக்கு நீயே எடுத்துச் சொல்லவேண்டும். ......... விளக்கவுரை ......... சகல பற்றுகளையும் கடந்த நிலையை 'எல்லாம் அற' என்று குறிப்பிடப்படுகிறது. இதில் அகப் பற்று, அதாவது உயிர் மேல் வைத்திருக்கும் பாசம், புறப் பற்று, என்னுடைய இல்லம் 'என்னுடைய குடும்பம்' முதலிய உலக பசு பாச தொந்தங்கள் அடங்கும். இவை நீங்கினவுடன் நான் .. எனது என்னும் ஜீவ போதத்தை இழந்து இறைவனுடன் கலந்து நீவேறெனாதிருக்க நாவேறெனாது இருக்கும் நிலை அடைந்து, ஜீவன் முத்தி நிலை அடையப்பெற்றால் அந்த அனுபவத்தை வாய் விட்டு கூற இயலாது. .. வாய் விட்டு பேச ஒண்ணாதது .. .. என்கிற 'வாசித்துக் காணொணாதது' (பாடல் 561) திருசிராப்பள்ளி - திருப்புகழ் அடியைக் கவனிக்கவும். மற்றுமொரு யோகக் குறிப்பும் இதில் காணலாம். அநுபூதி நிலையை முருகன் அருளால் அடையப்பெற்று மறுபடியும் ஜீவ நிலைக்கு திரும்பி வரும்போது வாய் பேச முடியாது. பேச்சு திரும்புவதற்கு சில நாட்கள் ஆவதை சித்தர்களின் வரலாற்றில் காணலாம். எப்போதும் உள்ளக்களிப்புடன் இருப்பவனும், துன்பம் சிறிதும் இல்லாதவனும், எல்லாவித பேறுகளையும்பெற்று அவாப்த சமஸ்த காமனாய் இருப்பவனும், அடியார்களுடன் மகிழ்ச்சியுடன் சம்பாஷித்துக் கொண்டிருப்பவனும், பல லீலைகளை புரிபவனும் நீதானே முருகா? ஆதலால் உன் அருளால் எனக்குக் கிடைத்த இந்தப் பேரானந்த நிலையை நீயே அனைவருக்கும் எடுத்துக் கூறவேண்டும். யோக வித என்பதற்கு வேறொரு பொருளும் காணலாம். முருகனுக்கு யோகாச்சார்ய மூர்த்தி என்ற பெயரும் உண்டு. .. யோகத் தாறுப தேசத் தேசிக .. .. என்கிற 'சேமக் கோமள' (பாடல் 59) திருச்செந்தூர் - திருப்புகழ் அடியை நோக்கவும். குண்டலினி யோகத்தில் கூறப்படும் இடைக்கலை சக்தியின் அம்சம். பிங்கலை சிவ அம்சம். நடுவில் உள்ள சுழுமுனை முருகனின் அம்சம். இந்த நாடி வழியே மூலக்கனலை செலுத்தும் போது சர்ப்ப வடிவில் இருக்கும். (Serpent Power by Aurthur Avalon .. என்கிற புத்தகத்தைப் பார்க்கவும்). குண்டலினியை எழுப்ப மயில் தியானம் மிகவும் உதவும். யோகவித என்கிற சொல்லை யோக + இத என்று பிரித்தால் முருகனின் ஆறு குணங்களும் வெளிப்படும். முதல் பாட்டில் வேலையும், மயிலையும், சேவலையும் பாடும் சாதனையைக் கூறி, அவைகளை விடாது தான் தியானித்ததால் தனக்குக் கிடைத்த பேரின்பத்தை .. அதாவது ஆத்ம ஞானத்தை இந்தப் பாட்டில் குறிப்பிடுகிறார். இதுவே சாயுச்சிய நிலை. ஆன்மா தன் சொரூபத்தை இழந்து இறைவனின் சொரூபத்தைப்பெற்று .. அதாவது ஜீவன் சிவ சொரூபமாகி அவனைப்போல் உல்லாச நிராகுலன் ஆக இருக்கவேண்டுமானால் நான் .. எனது எனும் அகங்காரம் மமகாரம் ஒழிய வேண்டும். அதற்கும் அவன் அருள் வேண்டும். இந்தப் பேரானந்த நிலையை நாவினால் எடுத்துக் கூற இயலாது. சர்க்கரை என்று சொன்னால் இனிக்காது. அதை சுவைத்தால் மட்டுமே இனிப்பை உணர முடியும். ஆதலால் முருகன் அருளால் நாம் எல்லோரும் வேல், மயில், சேவலைத் தியானித்து இந்தப் பெரு வாழ்வை அனுபவிக்க வேண்டும், என்று அருணை முனிவரின் கருணை உள்ளம் பறை சாற்றுகிறது. ......... குறிப்புக்கள் ......... வாக்கு, மனம், காயம் .. இம் மூன்றின் செயலும் அழிந்து, நான் என்னும் ஜீவ போதம் அற்ற நிலை தான் அநுபூதி நிலை என்றால், நாம் தினமும் அனுபவிக்கும் ஆழ்ந்த தூக்க நிலைதான் அநுபூதியா? என்கிற கேள்வி நம் மனதில் எழும். இல்லை என்கிறார் அருணை மாமுனிவர். வெறும் தூக்க நிலை இல்லை. .. உணர்வோடு தூங்குவார்க்கே விளங்கும் அநுபூதி .. என்ற அடியைப் பார்க்கவும். அந்த நிலையில், .. நானென்ப தற்றுயிரொ டுனென்ப தற்று வெளி நாதம் பரப்பிரம வொளிமீதே நாதம் சுரப்ப .. .. என்பார். ('தேனுந்து முக்கனிகள்' கயிலைமலை திருப்புகழ் - பாடல் 518). நாம் தூங்கும்போது ஒரு கட்டைக்கும் நமக்கும் வித்தியாசம் கிடையாது. அநுபூதி நிலையில் ஆத்ம போதம் கரைந்து அருட் பெரும் ஜோதியாய் பரமாத்மாக்குள் ஒன்றாகக் கலக்கும் நிலை கிடைக்கும். இதுவே அநுபூதி, பெரு வாழ்வு என்கிற பெயர்களால் சுட்டிக் காட்டப்படுகிறது. இதை ஒரு திருப்புகழில் மிகவும் அருமையாகக் கூறகிறார். தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடு தோன்றிய சோதியொடு ...... சிவயோகந் தூண்டிய சீவனொடு வேண்டிய காலமொடு சோம்பினில் வாழும்வகை ...... .. 'சாங்கரி பாடியிட' (பாடல் 1240) பொதுப்பாடல்கள் - திருப்புகழ். இந்தப் பேரானந்த நிலையை வாய்விட்டு கூற என்னால் முடியாதாகையினால் சகல கலா வல்லவனாகிய நீயே எல்லோருக்கும் எடுத்துச் சொல்லவேண்டும். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.635 WIKI_urai Song number: 2 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.12mb to download |
![]() | 'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.28mb to download |
![]() | சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.41mb to download |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |