Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

previous padalam   35 - இந்திராணி மறுதலைப் படலம்   next padalamindhirANi maRudhalaip padalam

Ms Revathi Sankaran (2.24mb)




(தக்க வேழகத்)

தக்க வேழகத் தலையள் கூறிய
     அக்கொ டுஞ்சொலை அணங்கு கேட்டலுந்
          தொக்க தன்செவித் துளையில் அங்கிவேல்
               புக்க தேயெனப் பொருமி விம்மினாள். ......    1

(கைம்ம லர்க்கொ)

கைம்ம லர்க்கொடே கடிதில் தன்செவி
     செம்மி வல்வினைத் தீர்வு நாடியே
          விம்மி யங்குறும் வெய்யள் கேட்டிட
               இம்மெ னச்சில இசைத்தல் மேயினாள். ......    2

(ஏடி நீயிவண்)

ஏடி நீயிவண் இசைத்த தீமொழி
     நேடி ஓர்ந்துளார் நிரய மாநெறி
          யூடு சேர்வரால் உரைத்த நிற்குமேற்
               கூடு தீமையார் குறிக்கற் பாலரே. ......    3

(வேதம் யாவையும்)

வேதம் யாவையும் விதித்த நான்முகன்
     காத லன்தருங் கடவுள் மங்கைநீ
          நீதி யில்லதோர் நெறியின் வாய்மையைப்
               பேதை யாரெனப் பேச லாகுமோ. ......    4

(தீங்கி யாவர்க்கு)

தீங்கி யாவர்க்குஞ் செய்தி டாதவர்
     தாங்கள் துன்புறார் தமக்கு வேண்டினோர்
          ஆங்கெ வர்க்குமுன் அல்லல் செய்வரால்
               ஈங்கு நீயிவை எண்ண லாய்கொலோ. ......    5

(தருமம் பார்த்திலை)

தருமம் பார்த்திலை தக்க மாதவக்
     கருமம் பார்த்திலை கற்பும் பார்த்திலை
          பெருமை பார்த்திலை பிறப்பும் பார்த்திலை
               உரிமை பார்த்திலை உறவும் பார்த்திலை. ......    6

(பழியும் பார்த்திலை)

பழியும் பார்த்திலை படியி கழ்ந்திடு
     மொழியும் பார்த்திலை முறையும் பார்த்திலை
          வழியும் பார்த்திலை வருவ பார்த்திலை
               இழியுந் தீயசொல் லியம்பற் பாலையோ. ......    7

(ஆன்ற தொல்வளன்)

ஆன்ற தொல்வளன் ஆற்றல் ஆயுள்பின்
     ஊன்று சீர்த்திகள் ஒருவுற் றோர்க்கிது
          தோன்று நீயிவை துணியல் வாழிகேள்
               சான்று நின்குலத் தகுவர் யாவரும். ......    8

(இந்தி ரற்கலால்)

இந்தி ரற்கலால் ஏவர் பாலினுஞ்
     சிந்தை வைத்திடேன் தீதில் கற்பினேன்
          வந்தெ னக்கிது வகுத்தி நின்கிளை
               உய்ந்தி டத்தகும் உரைய தன்றிதே. ......    9

(நூன்மை யாவை)

நூன்மை யாவையும் நுனித்து நாடிச்செங்
     கோன்மை யன்றியே கொடுமை செய்துள
          மேன்மை மன்னரும் வேறு ளார்களும்
               பான்மை யாற்பிலம் படுவர் திண்ணமே. ......    10

(மீளில் வெந்துயர்)

மீளில் வெந்துயர் வேலை சார்ந்துளான்
     நாளும் நாதனென் றறைதி யார்கணுங்
          கோளும் நல்லவுங் குறுகும் அல்லலும்
               நாளை உங்கள்பால் நணுகு றாதவோ. ......    11

(நீதி யாகிய நெறி)

நீதி யாகிய நெறியி லாதவள்
     ஆத லான்மிக அறிவு மாழ்கியே
          தீது கூறினாய் செவ்வி தன்றரோ
               மாது நீயிது மறத்தி யுய்யவே. ......    12

(ஏவ ரென்றனை)

ஏவ ரென்றனை எய்தற் பாலினோர்
     தேவர் சூழ்தரக் காப்பர் சிந்தையென்
          ஆவி ஐம்புலம் அளிக்கும் எங்கணுங்
               காவ லுண்டுநீ கடிதிற் போகென்றாள். ......    13

(என்ற காலையில் எயிறு)

என்ற காலையில் எயிறு தீயுகக்
     கன்று சேயிதழ் கறித்து வெய்துயிர்த்
          தொன்றொ டொன்றுகை உருமிற் றாக்கியே
               நன்று நன்றெனா நகைத்துச் சீறினாள். ......    14

(மறுவில் வாசவன்)

மறுவில் வாசவன் மனைவி கூறிய
     உறுதி வெய்யவட் கூற்றஞ் செய்தில
          அறிவில் பேதையாய் அலகை தேறலால்
               வெறிகொள் பித்தனுக் குரைத்த மெய்மைபோல். ......    15

(ஆன காலையில் அசமு)

ஆன காலையில் அசமு கத்தினாள்
     ஊன வெந்துயர் உழக்கும் பெற்றியால்
          வான வர்க்கிறை மாதை நோக்கியே
               தானு ரைத்தனள் இனைய தன்மையே. ......    16

(கிட்டி நல்லன)

கிட்டி நல்லன கிளத்தி னேனெனை
     ஒட்டி வந்திலை உரைத்தி மாறுனை
          அட்டு நுங்குவன் அண்ணற் காகவே
               விட்ட னன்இது மெய்மை யாகுமால். ......    17

(ஆர்த்தி யாவுநீ)

ஆர்த்தி யாவுநீ அகல வென்னுடைச்
     சீர்த்தி அண்ணர்பாற் சேறல் சிந்தியாய்
          பேர்த்தி டாதுனைப் பிடித்து வன்மையால்
               ஈர்த்துப் போகின்றேன் சரத மீதரோ. ......    18

(முடிவில் ஆற்றலார்)

முடிவில் ஆற்றலார் மூவர் யாவருந்
     தடைசெய் கிற்பினுஞ் சமரின் ஏற்பினும்
          விடுவன் அல்லன்யான் விரைவி னிற்கொடே
               படர்வன் அன்னது பார்த்தி மேலெனா. ......    19

(வெய்யள் அவ்வ)

வெய்யள் அவ்வயி ராணி மென்கரங்
     கையிற் பற்றியே கடிதின் ஈர்த்துராய்
          மொய்யிற் போயினாள் முரணி லாதவள்
               ஐய கோவெனா அரற்றல் மேயினாள். ......    20

(பாவி தீண்டலும்)

பாவி தீண்டலும் புலம்பிப் பைந்தொடி
     ஆவி போந்தென அவச மாகியே
          ஓவி லாததொல் லுணர்வு மாய்ந்தனள்
               காவி யொண்கணீர் கலுழத் தேம்பினாள். ......    21

(ஐயர் கையில்)

ஐயர் கையில்வந் தவுண ரைச்செறுந்
     துய்ய தீம்படை*1 தோகை கண்ணுறா
          வெய்ய சூர்கிளை வீட்ட வந்தென
               மையு லாயகண் வாரி மிக்கதே. ......    22

(காசி பன்தருங் கல)

காசி பன்தருங் கலதி கூற்றுவன்
     பாச மன்னகைப் பட்டு விம்மினாள்
          வாச வன்றனி மனைவி வெங்கொலைப்
               பூசை வாய்ப்படும் புள்ளின் பேடைபோல். ......    23

(நாரி லாதவள்)

நாரி லாதவள் நலிந்து கொண்டனள்
     பேரும் எல்லையில் பேதுற் றேயுளஞ்
          சோரு கின்றவள் சுற்று நோக்கியே
               யாருங் காண்கிலள் அரற்றல் மேயினாள். ......    24

ஆகத் திருவிருத்தம் - 3356




*1. ஐயர் - அந்தணர்கள்.
   அவுணர் - இங்குச் சந்தியா காலத்தில் இடையூறு புரியும் மாந்தேயர் என்னும் அசுரர்கள்.
   தீம்படை - இங்கு வருணாஸ்திரங்கள்.



previous padalam   35 - இந்திராணி மறுதலைப் படலம்   next padalamindhirANi maRudhalaip padalam

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]