![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 50 மதி கெட்டு |
![]() | ![]() | தமிழில் பொருள் எழுதியது 'திருப்புகழ் அடிமை' திரு சு. நடராஜன் (சென்னை) Meanings in Tamil by 'Thiruppugazh Adimai' Thiru S Nadarajan (Chennai) | PDF வடிவத்தில் ![]() ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 50 ... மதிகெட்டு (முருகன் அருளால் முக்தி பெற்றேன்) மதிகெட்டு அறவாடி, மயங்கி, அறக் கதிகெட்டு, அவமே கெடவோ கடவேன்? நதி புத்திர, ஞான சுகாதிப, அத் திதி புத்திரர் வீறு அடு சேவகனே. ......... பதவுரை ......... நதி புத்திர ... கங்கா நதியின் திருக் குமாரனே, ஞான சுக அதிப ... மெய் அறிவிற்கும் அதனால் விளையும் பேரின்பத்திற்கும் தலைவனே, அதிதி புத்திரர் ... அந்தத் திதி புத்திரராகிய அசுரர்களின், வீறு அடு சேவகனே ... வலிமையை அழித்த போர் வீரனே, மதி கெட்டு ... அறிவு கெட்டு, அற வாடி ... மிகவும் வாட்டமுற்று, மயங்கி ... மயக்கமுற்று, அற கதி கெட்டு ... அற நெறியால் வரும் உனது அநுபூதி நிலையை இழந்து, கெடவோ கடவேன் ... கெட்டு ஒழிந்து விட மாட்டேன் ......... பொழிப்புரை ......... கங்கையின் மைந்தனே, மெய்ஞானத்தால் அடியவர்களுக்கு பேரின்பத்தை அள்ளித் தரும் தலைவனே, திதி என்பவளின் வம்சத்தினரான தைத்திரையருடைய கர்வத்தை அடக்கினவனே, நான் இனி நல்லறிவு போய் மிகவும் கிலேசமடைந்து மாயையில் ஆழ்ந்து இனி எனக்கு வேறு கதி இல்லை என்று கெட்டுப்போக மாட்டேன். ......... விளக்கவுரை ......... பேசா அநுபூதி' அடைந்த அடிகள் முருகனால் ஆட்கொள்ளப்பட்டு தான் அடைந்த பெரும் பேற்றை பல விதமாகக் கூறி இருக்கிறார். இதற்கு முன் இரண்டு பாடல்களிலும் தான் அடைந்த ஞான அனுபவத்தைக் கூறினவர் நூல் முடியும் பொழுது மீண்டும் மதி கெட்டு மயங்கி இரஞ்சுவதாக பொருள் கொள்ளுவது அவ்வளவு சிறப்பு ஆகாது. அசுரர்களின் வலிமையையும் செருக்கையும் அழித்த மாவீரனான முருகன் என்னுடைய அசுர குணங்களையும் தீய வாசனைகளையும் அழித்துவிட்டான். தண்ணிய கங்கா மைந்தன் தன் தண் கருணையினால் எனக்கு சிவ ஞான அமுதை ஊட்டி விட்டான். ஆகையினால் நான் இனி மேல் வீணாக கெட்டுப் போகமாட்டேன். என் பூர்வ வாழ்க்கை எல்லாம் பொடிப் பொடியாய்ப் போய், வேறு கதி இல்லை என நினைத்த எனக்கும் உன் கருணைத் திறத்தால் என்னையும் ஆண்டு கொண்டதை நினைத்து பெரு மகிழ்ச்சியுற்றேன். .. ஆகையால் இந்தப் பாட்டை அருணகிரியார் பெருமிதத்துடன் பாடி இருக்கிறார் என பொருள் கொள்வதே சிறப்பாகும். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.693 pg 4.694 WIKI_urai Song number: 50 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.10mb to download |
![]() | 'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.26mb to download |
![]() | சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.43mb to download |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
![]() If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2017-2030 [xhtml] 2503.2022 [css]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact us if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by us (the owners and webmasters of www.kaumaram.com), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., we are NOT responsible for any damage caused by downloading any item from this website. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |