![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 22 காளைக் குமரேசன் |
![]() | ![]() | தமிழில் பொருள் எழுதியது 'திருப்புகழ் அடிமை' திரு சு. நடராஜன் (சென்னை) Meanings in Tamil by 'Thiruppugazh Adimai' Thiru S Nadarajan (Chennai) | PDF வடிவத்தில் ![]() ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 22 ... காளைக் குமரேசன் (தன் தவப் பேற்றை எண்ணி அதிசயித்தல்) காளைக் குமரேசன் எனக் கருதித் தாளைப் பணியத் தவம் எய்தியவா பாளைக் குழல் வள்ளி பதம் பணியும் வேளைச் சுர பூபதி, மேருவையே. ......... பதவுரை ......... பாளைக் குழல் ... கமுகின் பாளை போன்ற நீண்ட கூந்தலை உடைய, வள்ளி பதம் பணியும் ... வள்ளிப் பிராட்டியின் பாதங்களைத் தொழுகின்ற, வேளை ... முருக வேளை, சுர பூபதி ... தேவர்களின் அரசனை, மேருவையே ... மேரு மலையன்ன பெருமை உடையவனை, காளைக் குமர ஈசன் எனக் கருதி ... காளைப் பருவம் கொண்ட குமரன், ஈசன் என தியானம் செய்து, தாளைப் பணிய ... அவனுடைய திருவடிகளை வணங்கும்படியான, தவம் எய்தியவா ... தவத்தினை அடியேன் அடைந்தது ஆச்சரியமானது. ......... பொழிப்புரை ......... கூந்தப் பனை பாளையைப் போல் கருத்து நீண்ட கூந்தலை உடைய வள்ளியின் பாதங்களை வணங்குகின்ற முருகனை, தேவலோகத் தலைவனை, மேரு மலையைப் போன்ற கம்பீரமும், ஸ்தரத் தன்மையையும் உடையவனை காளைப் பருவத்து குமரக்கடவுள் என நிர்ணயம் செய்து, அவனுடைய திருவடிகளையே வணங்கும்படியான தவத்தை நான் அடைந்தது மிகவும் அதிசயமானது. ......... விளக்கவுரை ......... இநதப் பாட்டை மேல் நோக்காகப் பார்க்கும்போது மிகவும் சாமான்யமான கருத்தைக் கொண்டதுபோல்தான் தோன்றும். வள்ளி மணாளன்தான் முருகக்கடவுள் என்கிற உண்மையை யாவரும் அறிவர். வள்ளி கல்யாணம் என்பது புராணக் காலத்தில் நடந்த சம்பவம் அல்ல. இன்றும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சியே. ஞானத்திலோ பக்தியிலோ பக்குவம் அடைந்த ஆன்மாக்களை இறைவனே வலிய வந்து ஆட்கொள்வான். இதற்கு சாட்சியாக தன்னையே கூறுகிறார் .. பேற்றைத்தவம் சற்றும் இல்லாத தன்னையும் ஆட்கொண்டு சிவபோகத்தை அடையச் செய்த அதிசயத்தை மிகுந்த பூரிப்புடன் பறைசாற்றுகிறார் அருணை முனிவர். பக்குவப்பட்ட ஆன்மாக்களை ஆட்கொள்வதில் முருகன் அளப்பரிய ஆவல் கொண்டுள்ளான் என்பதை நாயகி நாயகன் பாவத்தில் என்றும் இளைஞனாகவே இருந்து சிவ மணம் புரிகிறான் என்கிற கருத்தை மனத்தில் அவனை 'குமரன்' என விளித்துக் கூறுகிறார். தன்னுடைய சரித்திரத்தையும் வள்ளி திருமணத்தையும் சேர்த்து கின்னங் குறித்து .. ' எனத் தொடங்கும் கந்தர் அலங்காரப் பாடலில் (24), வள்ளி கல்யாணம் என்ற பேரில், பிரணவ உபதேசம் செய்ததை .. ஓது குறமான் வனத்தில் மேவி அவள் கால் பிடித்து ஓம் எனும் உபதேச விதத்தோடு அணைவோனே .. ... என்பார். இந்த ரகசியத்தை என் செவியில் நீ சொன்ன அற்புதம் எப்பேற்பட்டது என எண்ணி எண்ணி வியக்கிறார். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.661 pg 4.662 WIKI_urai Song number: 22 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.10mb to download |
![]() | 'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.27mb to download |
![]() | சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.56mb to download |
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page | ![]() |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |