![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 21 கருதா மறவா |
![]() | ![]() | தமிழில் பொருள் எழுதியது 'திருப்புகழ் அடிமை' திரு சு. நடராஜன் (சென்னை) Meanings in Tamil by 'Thiruppugazh Adimai' Thiru S Nadarajan (Chennai) | PDF வடிவத்தில் ![]() ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 21 ... கருதா மறவா (திருவடி தீட்சை அருள்வாய்) கருதா மறவா நெறிகாண, எனக்கு இருதாள் வனசம் தர என்று இசைவாய் வரதா, முருகா, மயில் வாகனனே விரதா, சுர சூர விபாடணனே. ......... பதவுரை ......... வரதா ... கேட்ட வரங்களை வழங்கும் வள்ளலே, முருகா ... முருக வேளே, மயில் வாகனனே ... மயிலை வாகனமாகக் கொண்டவனே, விரதா ... அடியார்களைக் காக்கும் விரதம் கொண்டவனே, அசுர சூர விபாடணனே ... அசுர கூட்டங்களையும் சூரனையும் அழித்தவனே, கருதா மறவா நெறி காண ... நினைப்பு மறப்பு அற்ற வழியைக் கண்டு கொள்ள, எனக்கு ... அடியேனுக்கு, இருதாள் வனசம் தர ... உன்னுடைய இரு திருவடித் தாமரைகளைத் தருவதற்கு, என்று இசைவாய் ... உன்னுடைய திரு உள்ளம் எப்போது இசையுமோ? ......... பொழிப்புரை ......... வள்ளலே, அழகனே, மயில் வாகனக் கடவுளே, அடியார்களை ரட்சிப்பதையே விரதமாகக் கொண்டவனே, அசுர கூட்டத்தையும் சூரபத்மனையும் அழித்தவனே, நினைப்பு மறப்பு என்கிற இரு நிலைகளும் போய், நிர்விகல்ப நிலையை நான் உணர, உன்னுடைய இரண்டு திருவடித் தாமரைகளை அளிப்பதற்கு எப்போது உன் திரு உள்ளம் இசைவாயோ? ......... விளக்கவுரை ......... ஒருவன் விழித்திருக்கும் நேரங்களில் எதையாவது நினைத்துக் கொண்டிருக்கிறான் அல்லது எதையாவது மறக்கிறான். இந்த இரண்டு நிலைகளையும் பகல் இரவுகளுக்கு ஒப்பிடலாம். பல பாடல்களில் அந்தி பகல் அற்ற நிலை அருள்வாயே என்று வேண்டுவதைப் பார்க்கலாம். இந் நினைப்பும் மறப்பும் அற்ற நிலை ஏற்பட்டால்தான் ஆன்ம அனுபவத்தை அறிய முடியும். இந்நிலையே 'சுவானுபூதி' எனப்படுகிறது. இந்த நிலையை அடைய முருகனின் அருள் வேண்டும். இந்நிலையை, .. இராப்பகல் அற்ற இடத்தில் இருக்கை எளிதல்லவே .. ... என்பார். நினைப்பு மறப்பு என்கிற இரண்டும் ஒருவகை ஆற்றலின் இரு வேறு பக்கங்கள். மனம் இயங்கினால்தான் நினைப்பு ஏற்படும். மறதி என்பது மனம் இயங்கும்போது நினைப்பு வராமல் தயங்கும் நிலை. மனம் இயங்காமல் போனால் நினைப்பும் இல்லை. மறதியும் இல்லை. தூங்குபவர்களுக்கு இரண்டும் இல்லை. ஆனால் அவர்கள் இருளில் இருப்பவர்கள். விழிப்பு நிலையிலேயே நினைப்பு மறப்பு இன்றி இருக்கும் அனுபவமும் உண்டு. ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே முருக னுருவங்கண்டு தூங்கார் .. இந்த சுவானுபூதி நிலையை 'உணர்வோடு தூங்குவார்க்கே விளங்கும் அனுபூதி' என்கிறார் 'வேப்பூர்' திருப்புகழில். (பாடல் 753 'குரைகடல் உலகினில்'). இந்த அனுபவத்தை அடைய மனதை இறைவனின் திருவருள் எண்ணத்திலேயே லயிக்கச் செய்ய வேண்டும். இந்த முயற்சியில் முருகனின் திருவடித் தாமரைகளின் துணையை வேண்டுகிறார். அப்படி முயற்சி செய்யும்போது 'ஞானமாக நின்று ஒளிவீசும் இருதாள் வனசம் கருதா மறவா' நிலை வந்த பிறகு அதுவே முக்தி நிலையாக மாறிவிடும். இறைவனின் திருவடிகள் சவிகல்ப சமாதியில் தியானப் பொருளாகவும் நிர்விகல்ப சமாதியில் நாம் அடையும் யோக அனுபூதி நிலையாகவும் மாறிவிடும். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.660 pg 4.661 WIKI_urai Song number: 21 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.11mb to download |
![]() | 'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.26mb to download |
![]() | சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.52mb to download |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |