![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 14 கைவாய் கதிர் |
![]() | ![]() | தமிழில் பொருள் எழுதியது 'திருப்புகழ் அடிமை' திரு சு. நடராஜன் (சென்னை) Meanings in Tamil by 'Thiruppugazh Adimai' Thiru S Nadarajan (Chennai) | PDF வடிவத்தில் ![]() ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 14 ... கைவாய் கதிர்வேல் (மனதிற்கு உபதேசம்) கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய் மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம் ஐவாய் வழி செல்லும் அவாவினையே. ......... பதவுரை ......... மனனே ... ஏ மனமே, மெய் ... உடம்பு, வாய் ... வாய், விழி ... கண், நாசி ... மூக்கு, செவியாம் ... காது ஆகிய, ஐவாய் வழி செல்லும் அவா வினையே ... ஐம் பொறிகளின் வழியே செல்லும் ஆசைகளை, ஒழிவாய் ஒழிவாய் ... முற்றிலும் ஒழித்து விடு (அதனால்), கைவாய் கதிர் வேல் ... திருக் கரத்தில் விளங்கும் ஒளிவீசும் வேலாயுதத்தை உடைய, முருகன் கழல் பெற்று ... முருகப் பெருமானின் திருவருளைப் பெற்று, உய்வாய் ... உயர்வு பெற்று வாழ்வாய். ......... பொழிப்புரை ......... நெஞ்சே, கையில் விளங்கும் ஞானச் சுடர் வீசுகின்ற ஐவேலை உடைய முருகப் பெருமானின் திருவடிகளை புகலிடமாகப் பெற்று ஈடேறக் கடவாய். ஐம்புலங்களின் வழியே செல்லும் ஆசையை தள்ளுவாயாக. ......... விளக்கவுரை ......... நாம் என்ன செயல் செய்தாலும் மனதால் எண்ணிய பிறகே செயல்படுகிறோம். நமது மனதை நற்சிந்தனைகளை நினைக்கப் பழகிக்கொள்ளவேண்டும். ஆனால் மனமோ ஐந்து இந்திரியங்களின் செயலால் உண்டாகும் இன்பத்தை ஏற்கனவே அறிந்திருக்கிறது. மேன்மேலும் அத்தகைய இன்பங்களை அடையவேண்டும் என்கிற எண்ணமே சதா நமது மனதில் குடிகொண்டுள்ளது. ஆகையால் நம் வாழ்நாளில் இந்த ஐம்பொறிகளுக்கு உணவு போடுவதே பெரிய வேலையாகி விட்டது. .. அற்றைக் கிரைதேடி அத்தத் திலுமாசை பற்றித் தவியாத பற்றைப் பெறுவேனோ .. ... என்கிற அடிகளைச் சிந்திக்கவும். ('அற்றைக் கிரைதேடி' - காஞ்சீபுரம் திருப்புகழ் - பாடல் 329). ஆனால் எரிகின்ற நெருப்பில் மேன்மேலும் விறகையோ அல்லது நெய்யையோ இட்டால் தீ அதிகமாகவே எரியுமே தவிர அணையாது. ஆதலால் .. ஏ மனமே, ஐம்பொறிகளாகிய ஐந்து வாயில்களின் வழியே சென்று அவாவுவதை ஒழித்து விடு .. ... என்கிறார் அருணகிரியார். ஆசை இல்லை என்றால் முயற்சியும் அனுபவமும் இல்லை. அவாவை ஒழிப்பதற்கு மனதிற்கு வேறு ஒரு வழியைக் காண்பிக்கவேண்டும். முருகப் பெருமானின் கழல்களை சதா தியானித்துக் கொண்டே இரு. ஆசைகள் அடங்கி விடும். பிறகு அவாவுதல் கிடையாது. வினைகளும் நம்மை பிறப்பில் கட்டுப்படுத்தாது. மனம் உருவத்தையே பற்ற பழக்கம் கொண்டிருப்பதால் ஜோதி வீசுகின்ற ஐவேலை முதலில் தியானிக்க வேண்டும். பிறகு முருகனுடைய திருக்கை. பின் கொஞ்சம் கொஞ்சமாக முருகனுடைய உருவம் முழுவதும் அகக் கண்ணில் வந்தபின் அவனுடைய திருவடியை உறுதியாக துணையாக பிடித்துக்கொண்டு கடைத்தேறுவாய் என்பதே அருணகிரியாரின் அருமை உபதேசம். ஆக அவா என்பது பிறப்பு ஈனும் வித்து என்ற திருக்குறளின்படி, பிறப்பை அறுக்க முதலில் ஆசையை ஒழிக்க வேண்டும். ஆசையை அடக்க ஐந்து குதிரைகளான ஐம்புலங்கள் ஒடுக்கப்படவேண்டும். புலன்கள் அடங்க, ஐந்து குதிரைகளை ஓட்டும் சாரதியாகிய மனம் அடங்கவேண்டும். மனத்தை அடக்க அதை முருகனின் திருவடிகளில் அன்பு என்னும் கயிற்றால் கட்டி விட வேண்டும். இவ்வாறு குகன் சரணத்தில், ... ஓடும் மனதை இருத்த வல்லவர்களே காலத்தை வென்றிருப்பார். வெறும் தீய வழிகளில் சென்று உழல்பவர்கள் மீண்டும் மீண்டும் மரித்துப் பிறப்பார்கள். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.651 WIKI_urai Song number: 14 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.11mb to download |
![]() | 'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.28mb to download |
![]() | சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.45mb to download |
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page | ![]() |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |