![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 10 கார் மா மிசை |
![]() | ![]() | தமிழில் பொருள் எழுதியது 'திருப்புகழ் அடிமை' திரு சு. நடராஜன் (சென்னை) Meanings in Tamil by 'Thiruppugazh Adimai' Thiru S Nadarajan (Chennai) | PDF வடிவத்தில் ![]() ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 10 ... கார் மா மிசை (காலன் அணுகாமல் காத்திடுவான் கந்தன்) கார் மா மிசை காலன் வரில், கலபத் தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய் தார் மார்ப, வலாரி தலாரி எனும் சூர்மா மடியத் தொடுவே லவனே. ......... பதவுரை ......... தார் மார்ப ... மலர் மாலையணிந்த திரு மார்பினரே, வலாரி தலாரி எனும் ... வலன் என்ற அசுரனை அழித்த இந்திரனுடைய பொன்னுலகை அழித்த, சூர் மா மடிய தொடு ... சூரனாகிய மாமரம் அழியும்படி செலுத்திய, வேலவனே ... வேலாயுதக் கடவுளே, கார் மா மிசை ... கரிய எருமையின் மீது, காலன் வரில் ... காலன் வரும்போது, கலபத்து ஏர் மா மிவை வந்து ... அழகிய தோகையை உடைய மயில் வாகனத்தில் எழுந்தருளி, எதிரப் படுவாய் ... அடியேன் எதிரே வந்தருள்வீராக ......... பொழிப்புரை ......... மாலை திகழும் திரு மார்பை உடையவனே, வலன் என்கிற அசுரனை ஜெயித்து, இந்திரனின் வாசஸ்தலமாகிய அமராவதிக்கு பகைவனாகிய சூரபத்மா என்கிற மா மரம் அழிந்துபோக வேலைப் பிரயோகித்தவனே, கரிய நிறத்தை உடைய எருமை வாகனத்தில் ஏறிவரும் எமன் எனது உயிரைக் கொள்ளை கொள்ள வந்தால் அக்கணமே தோகையை உடைய அழகிய குதிரையாகிய மயில் வாகனத்தில் வந்து தோன்றி அருள வேண்டும். ......... விளக்கவுரை ......... மனிதனின் நோய்களான வறுமை, பகை ஆகியவற்றால் வரும் துன்பங்களைவிட மரணத்தால் வரும் துன்பமே பெரிது. மற்ற துன்பங்களுக்கு அவைகள் ஏற்பட்ட பிறகு அவைகளுக்கான மருந்துகளை தேடிக் கொள்ளலாம். ஆனால் மரண துன்பத்திற்கு இப்போதே மருந்தை சம்பாதித்து வைத்துக்கோள்ள வேண்டும். இறைவனுடைய திருவருளே மரண துன்பத்திற்கு ஏற்ற மருந்து. காலன் வராமல் இருக்க வேலனின் துணை வேண்டும். காலன் கரி நிறம் கொண்டவன். அச்சமூட்டும் உருவத்தை உடையவன். காலத்தைக் கணக்கெடுப்பவன். வேலனோ செம்மேனியன். மனத்தைக் கொள்ளை கொள்ளும் உருவினன். காலத்தற்கு அப்பாற்பட்டவன். காலனின் வாகனம் எருமை. அது விகாரமான தோற்றமுடையது. ஆனால் மயிலோ பசுமை நிறமுடையது. சூர சம்காரத்தின் மூலம் அடியார்களை கந்தக் கடவுள் காப்பாற்றுவான் என்பதை நினைவூட்டுகிறார். இழந்துபோன சாம்ராஜ்யத்தை இந்திரனுக்கு மீட்டு கொடுத்ததுபோல ஜீவான்மாக்கள் இழந்த ஆன்மீக சாம்ராஜ்யத்தை முருகன் மீட்டுக் கொடுத்து ரட்சிப்பார். அப்படி கொடுத்து ஜீவாத்மாக்களை தன்னுடன் சேர்த்துக் கொள்வான் என்பதற்கு அறிகுறியாக காதல் மாலையை அணிந்திருக்கிறான். ......... குறிப்புக்கள் ......... 1. மயில் என்பதற்கு, முதல் பாட்டிலியே, பிரணவ சொரூபம் என பார்த்தோம். வேறொரு அருமையான பொருளும் இருக்கிறது. .. ஓம் சுத்த சித்த சொரூப மயூர அதிஷ்டானாய நமஹ .. என முருகனின் ஒரு நாமம் பேசுகிறது. அதாவது மலங்கள் நீங்கப்பெற்ற தூய சித்தமாகிய மயிலை தனது இருப்பிடமாகக் கொண்டவனுக்கு நமஸ்காரம் என்பதுதான் இதன் பொருள். 2. இந்த அநுபூதி நாள் பூராவும் ஜெபிக்கப்பட வேண்டிய பாடலில் ஒன்றாகும். அப்படி செய்து வந்த ஒரு அடியாருக்கு அவருடைய அந்திம காலத்தில் முருகன் அருளிய அற்புத நிகழ்ச்சியை ஒரு சிறந்த அநுபூதி வித்தகரான திண்டுக்கல் சண்முகநாத பிள்ளை அவர்கள் குறிப்பிடுகிறார். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.644 pg 4.645 pg 4.646 WIKI_urai Song number: 10 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.12mb to download |
![]() | 'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.28mb to download |
![]() | சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.43mb to download |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |