Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அநுபூதி
51 செய்யுட்கள்

Sri AruNagirinAthar's
Kandhar AnubUdhi
51 verses

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி  - 43  தூசா மணியும்
 
Kandhar Anuboothi thUsA maNiyum with meanings by Thiru S. NatarajanThiru S Nadarajan    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை'
    திரு சு. நடராஜன் (சென்னை)

   Meanings in Tamil by
   'Thiruppugazh Adimai'
   Thiru S Nadarajan (Chennai)

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 43 ... தூசா மணியும்

(சொல்லற எனும் ஆனந்த மெளனம்)

தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினது அன்பு அருளால்
ஆசா நிகளம் துகளாயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே.

......... பதவுரை .........

தூசு ஆம் மணியும் ... தூய்மையான இரத்தின மணிகளும்,

துகிலும் புனைவாள் ... ஆடைகளும் அணிகின்ற வள்ளி பிராட்டியாரின்,

நேசா ... காதலனே,

முருகா ... முருகப் பெருமானே,

நினது அன்பு அருளால் ... நீ காட்டிய அன்புடன் கூடிய அருளினால்,

ஆசா நிகளம் ... ஆசையாகிய விலங்கு,

துகள் ஆயின பின் ... தூள் தூளாக பொடியான பின்

பேசா அநுபூதி பிறந்ததுவே ... மெளன நிலையுடன் கூடிய அநுபூதி
நிலை எனக்குக் கிடைத்தது.

......... பொழிப்புரை .........

தூய மாணிக்க மாலையையும் அழகிய ஆடைகளையும் அணிந்திருக்கும்
வள்ளியின் நாயகனே, இளமையும் அழகும் உடையவனே, உனது பெருங்
கருணையின் காரணமாக ஏற்பட்ட திருவருளால் ஆசை என்கிற தொடர்
சங்கிலி போன்ற பெருந் தடைகள் தூள் தூளாக உடைந்து போயின. நான்
மோன நிலையை அடைந்துவிட்டேன். இதுவே எனது அநுபூதியாகும்.

......... விளக்கவுரை .........

இப் பாடலில் வள்ளி என்று குறிப்பிடாமல் இருக்கும்போது, நாம்
வள்ளியைக் குறிப்பிடுகிறது என்று எடுக்க என்ன காரணம்? வள்ளியின்
கல்யாண தத்துவத்திற்கு ஏற்ப, பக்குவ ஆன்மாவை ஆட்கொண்ட
திறத்தைக் குறிக்க வள்ளியையே இங்கு குறிப்பதாக ஏற்பதே முறை.
ஏனெனில் முருகன் அருணகிரியாரின் பக்குவத்தை அறிந்து, தானே
சென்று ஆட்கொண்டான் அல்லவா?

அன்பு முதிர்ந்து அருளாக பழுக்கிறது. வள்ளியம்மையின் மீது
கொண்ட அன்பால் அவள் வாழும் காட்டிற்கு சென்று, அவளை மணந்து
அருளியதுபோல் அருணகிரியாரின் பக்திக்கு இரங்கி அவர் மீது
கொண்டிருந்த அன்பின் மிகுதியால் அவரைத் தற்கொலை செய்து
கொள்ளவிடாமல், தடுத்து, உபதேசம் செய்து அருளினார்.
இதை ஞானமலை திருப்புகழில் ('மனையவள் நகைக்க' - பாடல் 610),

   அகமதை எடுத்த சேமம் இதுவோவென்
   றடியனு நினைத்து நாளு முடலுயிர் விடுத்த போது
   மணுகிமு னளித்த பாத மருள்வாயே

உடல் உயிர் விடுத்த போது அணுகி முன் அளித்த பாதம் அருளி
மனமுருக்கி யோக அநுபூதி பெற்றதை மேற்கண்டவாறு கூறுகிறார்.

தூசா மணியும் துகிலும்' என்பதின் உட் கருத்து, ஞானம், வைராக்கியம்,
பக்தி என்கிற ஆபரணங்களை பூண்ட முருகனின் அடியார்களை
நினைவுபடுத்துகிறது.

நிகளம்' என்றால் சங்கிலி. ஆசைகள் சங்கிலித் தொடர்போல்
ஒன்றோடு ஒன்றுபோல் பிணைத்துக்கொண்டு வருவதால் அதை
நிகளம் என்கிறார். நாம் அருள் பெறுவதற்கு தடையாக இருப்பது இந்தச்
சங்கிலியே. முந்திய பாடல்களில் இந்த விரோதிகள், அகம், மாடை,
மடந்தையர், மங்கையர், போராவை, பூமேல் மயல், சகமாயை, அமரும் பதி,
கேள், இல்லோடு செல்வம், மின்னே நிகர் வாழ்வை விரும்புதல் மெய்யே
என இவ் வாழ்வை உகத்தல், அகந்தை (இப்படி மேலும் பல) ஆவன.
இப்படிப்பட்ட விரோத சொரூபங்கள், முருகனின் அன்பு அருளால் தூள்
தூளாகிப் போய் விடுகின்றன.

'மோனம்' என்பது ஞானத்தின் வரம்பு. 'நிர்விகல்ப' சமாதியில்
அனுபவிக்கும் இந்த மோனத்தையே முன் பாட்டில் 'திரிபுடி' என்கிறார்.
திரிபுடி அற்ற இடத்தில் பேச்சுக்கே இடம் கிடையாது. இதுவே
'பேசா அநுபூதி'.

'அகர முதலென' எனத் தொடங்கும் - பொதுப்பாடல்கள் - திருப்புகழில்,
(பாடல் 1124), இதையே மெளன மந்திரம் என்கிறார்.

ஒரு சிலரின் கருத்துப்படி 'பேசா அநுபூதி' என்று சொன்னதால்,
இந்த 43 வது பாடலுடன் கந்தர் அநுபூதி முடிகிறது என்பர். அமரர்
கி. வ. ஜ. அவர்கள் இதற்கு ஒரு நல்ல விளக்கம் தருகிறார். அதன்படி,

   "ஒருவன் நல்ல விருந்து உணவை உண்டபின் நிம்மதியாக
உறங்கும் பொழுது ஒரு இனிமையான சுகம், ஏப்பம் உண்டாகி, இன்ப
ருசியைத் தருவதுபோல் அநுபூதி நிலையில், ஒரு எதிரொலியாக
மீதமுள்ள ஏழு பாடல்களும் எழுந்தன."

... என்கிறார்.
go to top
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.683  pg 4.684 
 WIKI_urai Song number: 43 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
0.10mb
 to download 
Malai Mandir Ishwinderjit Singh
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங்

'MalaiMandir' Thiru Ishwinderjit Singh
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
0.27mb
 to download 
Chennai Revathy Sankaran
சென்னை ரேவதி சங்கரன்

Revathy Sankaran (Chennai)
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

 பதிவிறக்க 
0.66mb
 to download 
 51 செய்யுட்கள்  51 செய்யுட்கள் (ஒலிவடிவத்துடன்) 
52-101 செய்யுட்கள்  52-101 செய்யுட்கள் (ஒலிவடிவத்துடன்) 
 பொருள் - பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா)  SS
 51 verses - English Transliteration   51 verses (with audio)
 52-101 verses - English Transliteration   52-101 verses (with audio)
 Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia)  SS
 அகரவரிசைப் பட்டியலுக்கு   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 For Alphabetical List   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar Anuboothi - Verse 43 thUsA maNiyum

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]