![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 8 அமரும் பதி |
![]() | ![]() | தமிழில் பொருள் எழுதியது 'திருப்புகழ் அடிமை' திரு சு. நடராஜன் (சென்னை) Meanings in Tamil by 'Thiruppugazh Adimai' Thiru S Nadarajan (Chennai) | PDF வடிவத்தில் ![]() ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 8 ... அமரும் பதி (மயக்கம் தீர்ப்பான் முருகன்) அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப் பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா குமரன் கிரிராச குமாரி மகன் சமரம் பெரு தானவ நாசகனே. ......... பதவுரை ......... குமரன் ... குமாரக் கடவுள், கிரி ராச குமாரி மகன் ... மலை அரசனது மகளான பார்வதியின் புதல்வன், சமரம் பொரு தானவ நாசகனே ... போருக்கு வந்த சூரர்களை அழித்தவன், அமரும் பதி ... நான் பிறந்த ஊர், கேள் ... உறவினர்கள், அகம் ஆம் ... நான் தான் எனப்படும், இப் பிரமம் கெட ... இந்த மயக்க அறிவு, பிரமை கெட்டு ஒழிய, மெய்ப் பொருள் பேசியவா ... மெய்ப் பொருள் பேசியது என்ன ஆச்சரியம். ......... விளக்கவுரை ......... ஆறாவது பாட்டிற்கும் இப் பாட்டிற்கும் தொடர்பு உண்டு. நாம் உய்வதற்காக முருகன் பதினெட்டு சாத்திரங்களை அருளி இருந்தும் அவைகளைப் பயன்படுத்தாமல் இருந்த தனக்கும் குருநாதராய் உபதேசம் செய்ததால் ஜெக மாயை அகன்று போனதைக் கூறுகிறார். தாம் வசிக்கும் ஊர், சுற்றம், சரீரம், இல்லம் என்கிற பிரமை ஒழிய மெய்ப் பொருளை உபதேசித்த ஆச்சரியத்தை என் சொல்வேன் என்கிறார். உபதேசம் செய்த குருநாதரோ என்றும் இளையோன், அழிவில்லாதவர். ஊர், உற்றார், சரீரம் போன்றவைகள் சாஸ்வதம் இல்லை. நிலையான தன்மை உடையவராலேயே நிலையான பொருளை உணர்த்த முடியும். குமரன் என்ற வார்த்தைக்கு எப்பொழுதும் நிலையானவன் எனக் கூறப்படும். அருவப் பொருள் உருவமாக வந்தால்தான் உபதேசம் செய்யமுடியும். ஆதலால் பார்வதியின் மைந்தனே என்கிறார். மும்மலச் சொரூபமான சூரனை அழித்தவனே நமது மலங்களையும் அழிக்க வல்லவன். ஆக தானே மெய்ப்பொருளாக இருப்பவரும், கருணையினால் உருவத் திருமேனிகொண்டவரும், மும்மதச் சூரனை அழித்தவருமாகிய முருகன் தனக்கு உபதேசித்து அருளியதால் தன்னைப் பற்றி இருந்த ஊர், சுற்றம், சரீரம் என்கிற மாயை தெளியப்பெற்றேன். இது விந்தையே. ஏனெனில் அநாதியான ஆன்மாவைப் பற்றி இருக்கும் மாயை ஒழிவதென்றால் அது சொல்லொணாத ஆச்சரியமல்லவா. செம்பில் இயல்பாக இருக்கும் களிம்பு தானாக நீங்குவது அது மாதிரியான வியப்பான சம்பவம் இது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.642 pg 4.643 WIKI_urai Song number: 8 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.11mb to download |
![]() | 'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.29mb to download |
![]() | சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.41mb to download |
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page | ![]() |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |