![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 48 அறிவு ஒன்று |
![]() | ![]() | தமிழில் பொருள் எழுதியது 'திருப்புகழ் அடிமை' திரு சு. நடராஜன் (சென்னை) Meanings in Tamil by 'Thiruppugazh Adimai' Thiru S Nadarajan (Chennai) | PDF வடிவத்தில் ![]() ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 48 ... அறிவு ஒன்று (மேலான தவ நிலை அருள்வாய், காவலனே) அறிவு ஒன்று அற நின்று, அறிவார் அறிவில் பிறிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ? செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதைய வெறி வென்றவரோடு உறும் வேலவனே. ......... பதவுரை ......... செறிவு ஒன்று அற வந்து ... உலகாயத பந்த பாசத்தில் நெருக்கமான உறவுகள் அற்றுப் போகும் நிலை ஏற்பட்டு, இருளே சிதைய ... அதனால் மல இருள் முற்றிலும் வலிமை குன்றி ஒழியும்படி, வெறி வென்றவரோடு ... மயக்கத்தை வென்ற சிவ ஞானிகளுடன், உறும் வேலவனே ... பொருந்தி இருக்கும் வேலாயுதக் கடவுளே, அறிவு ஒன்று அற ... ஜீவ போதம் தன்னை விட்டு நீங்கி, நின்று அறிவார் அறிவில் ... சிவ போத நிலையில் அடங்கி, அந்த அருட் காட்சியில் லயித்து பதிஞானத்தால் உணர்கின்ற சிவ ஞானிகளது உள்ளுணர்வில், பிறிவு ஒன்று அற ... பிரிதல் சிறிது கூட இல்லாமல், நின்ற பிரான் அலையோ ... கலந்து நின்ற பெருமான் நீ அல்லையோ? ......... பொழிப்புரை ......... அது இது என்று பிரித்துக் காட்டும் பிரபஞ்ச அறிவு அற்று, அறிவுக்கு அறிவாய்த் தோன்றும் மெய்ஞானத்தில் நிலைக்கப் பெற்றிருக்கும் ஞானிகளின் அறிவில் பேதமில்லாமல் நிற்கும் பரம் பொருள் நீயே. நெருங்கி வரும் மலத்தடிப்பு (களிம்பு) அகன்று, அஞ்ஞான இருள் நீங்கி, காமக் குரோதிகளான வெறிகளை ஜெயித்த ஜீவன் முத்தரோடு ஒன்றாகச் சேரும் வேலாயுதக் கடவுளே. ......... விளக்கவுரை ......... இப்பாடல் ஜீவன் முத்தர்கள் இறைவனோடு ஒன்றாக அழுந்தி இருக்கும் முறையைக் கூறுகிறது. ஆணவ மலத்தில் கட்டுண்டு பிரபஞ்சத்தை தன்னில் இருந்து வேறாய், 'அவன் இவன் உவருடன் அவள் இவள் உவளது இது உது எனும்' என்று சுட்டிக் காட்டும் அவித்தையாகிய அஞ்ஞானம் முற்றும் நீங்க வேண்டும். யாவற்றையும் தன்னுள்ளேயும், யாவற்றுள்ளும் தன்னையும் பார்ப்பது ஞானிகளின்அனுபவம். 'எனது யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும் இதய பாவனாதீதம்'. இந்த நிலை கணபதியும் முருகனும் மாம்பழத்திற்காக போட்டியிடும் சரித்திரம் இந்த இரண்டு தத்துவங்களையும் பிரகாசப் படுத்துகின்றது. விநாயகப் பெருமான் ஈசனை சுற்றி வருவதன் மூலம் 'சகல பிரபஞ்ச வஸ்துக்கள் ஈசனுள் அடக்கம்' என்பதையும், முருகன் ஜெகத்தை ஒரு நொடிக்குள் சுற்றி வருவதால் 'இறைவன் சகல சிருஷ்டிக்குள்ளும் அடங்கி இருக்கிறான்' என்பதையும் தெளிவுபடுத்துகிறது. இந்த அத்துவித ஞானமே தானாய், ஞானப்பிரகாசமாய், நிற்பவனே முருகன். இந்த அனுபவத்தை 'செறிவு' அதாவது (1) மலத் திட்பம் ஒழிதல், (2) அஞ்ஞானமாகிய இருள் நீங்குதல், (3) ஐம்புலங்களையும் வெல்லுதல் என்கிறார். இவைகளை எல்லாம் வென்ற ஞானிகளை 'ஜித்தேந்திரர்' என்கிறோம். ஆன்மாக்களுக்கு கேவல நிலை, சகல நிலை, சுத்த நிலை என்று மூன்று நிலைகள் உள்ளன. மகா பிரளய காலத்தில் உயிர்கள் எல்லாம் ஆணவ மலத்தில் பிணிப்புண்டு, பொற்கொல்லனுடைய தீயில் இருக்கும் தங்கம்போல் இருப்பது கேவல நிலை. மறுபடி பனர் சிருஷ்டி ஆரம்பிக்கும் பொழுது, உயிர்கள் அவர் அவர்களின் வினைக்கு ஈடாக கோடிக்கணக்கான சரீர பேதங்களை அடைதல் கேவல நிலை. இப்பேர்ப்பட்ட ஜீவன்கள் சக்தி நிபாதம் ஏற்பட்டு இறைவன் அருளால் இருவினைகளும் செயலற்று ஜீவன் முத்தனாகும் நிலையே சுத்த நிலை. ஜீவன் முத்தர்களுக்கு இத்தேகம் அழிந்தபின் மீண்டும் பிறவி கிடையாது. எல்லாவற்றிற்கும் இறைவன் திருவருள் கூட வேண்டும். இதையே மாணிக்கவாசகர் திருவாசகத்தில், .. மீண்டு வரா வழி அருள் புரிவாய் .. ... என கூறுவார். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.691 pg 4.692 WIKI_urai Song number: 48 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.10mb to download |
![]() | 'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.26mb to download |
![]() | சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.46mb to download |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |