![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 19 வடிவும் |
![]() | ![]() | தமிழில் பொருள் எழுதியது 'திருப்புகழ் அடிமை' திரு சு. நடராஜன் (சென்னை) Meanings in Tamil by 'Thiruppugazh Adimai' Thiru S Nadarajan (Chennai) | PDF வடிவத்தில் ![]() ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 19 ... வடிவும் தனமும் (வறுமையை நீக்கி அருள்வாய்) வடிவும் தனமும் மனமும் குணமும் குடியும் குலமும் குடிபோ கியவா அடி அந்தம் இலா அயில் வேல் அரசே மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே. ......... பதவுரை ......... அடி அந்தம் இல்லா ... முதலும் முடிவும் இல்லாத, அயில் வேல் ஆரசே ... கூரிய வேலாயுதத்தை கையில் ஏந்திய அரசனே, மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே ... வறுமை என்கிற ஒரு பாவி வந்து விட்டால், வடிவும் ... உடல் அழகும், தனமும் ... செல்வங்களும், மனமும் ... நல்ல மனமும், குணமும் ... நல்ல குணநலங்களும், குடியும் ... பிறந்த வம்ச பரம்பரையின் பெருமையும், குலமும் ... பிறந்த குலத்தின் பெருமையும், குடி போகியவா ... நீங்கி விடுகின்றன. (இது பெரும் வியப்பே). ......... பொழிப்புரை ......... பிறப்பும் இறப்பும் இல்லாத வேலாயுதப் பெருமானே, வறுமை என்கிற பாவி பிடித்துவிட்டால், ஒருவனுடைய அழகும் சமூகத்தில் அவன் கொண்டிருக்கும் உயர் நிலையும் நல்லொழுக்கமும், பரம்பரை கெளரவமும், நீங்கி விடுகின்றனவே. இது என்ன ஆச்சரியம். ......... விளக்கவுரை ......... அருணகிரி நாதர் நல்ல குடியிலும் குலத்திலும் பிறந்து சிறந்த குணவானாக திகழ்ந்த போதிலும், விலைமாதர் பழக்கத்தினாலும் வேறு பல தீய பழக்க வழக்கங்களினாலும் கொடிய வறுமை எய்தினார் என்பதை அவரது திருப்புகழ் பாடல்களினால் தெரிய வருகிறது. வறுமை யாகிய தீயின் மேற் கிடந்து நெளியு நீள்புழு வாயினேற் கிரங்கி அருள்வாயே. ... (பாடல் 749) 'அறிவிலாதவர்' (திருநெல்வாயில்) புலி வேட்டைக்குள் வரு பசுவைப் போல மிடியாற் பட்ட பாடு ஒரு கதையை பாரினில் யார்க்குச் சொல்வேனினி .. ... என கூறுகிறார் ('வறுமை பாழ்பிணி'). வறுமை வந்தால் மேனி அழகு குறைகிறது. சமுகத்தில் வகித்து வந்த அந்தஸ்து நீங்குகிறது. வந்த வறுமையை போக்கிக்கொள்ள மனம் தீய வழியில் செல்ல நாடுகிறது. அதனால் நல்ல குணம் போய் கெட்ட குணம் ஏற்படுகிறது. அனைவரும் பரிகசிக்கும்படியாக மானம் காற்றில் பறந்துவிடுகிறது. ஒருவனிடம் பல நற்குணங்கள், நல் குடிப்பிறப்பு, கவர்ச்சித் தோற்றம், ஒழுக்கம் சீலம் அமைந்திருந்த போதிலும் கையில் பணம் இல்லாவிடில் சமூகம் அவனை மதிப்பதில்லை. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.658 pg 4.659 WIKI_urai Song number: 19 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.10mb to download |
![]() | 'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.26mb to download |
![]() | சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.51mb to download |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |