Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
சேவல் விருத்தம்

Sri AruNagirinAthar's
SEval viruththam

Sri Kaumara Chellam
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan ஆரம்பம்  எண்வரிசை தேடல்  முழுப்பாடலுக்கு 
home in PDF numerical index search all verses

தமிழில் பொருள் எழுதியது
'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன், சென்னை, தமிழ்நாடு

Meanings in Tamil by 'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
Chennai, Tamil Nadu
Murugan's SEval
சேவல் விருத்தம் 2 - எரியனையவியன்

SEval viruththam 2 - eriyanaiyaviyan   with mp3 audio
 previous page
next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.784  pg 4.785 
 WIKI_urai Song number: 2 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Guruji Raghavan and Thiruppugazh Anbargal பாடலைப் பதிவிறக்க 

 to download 


......... மூலம் .........

எரியனைய வியனவிரம் உளகழுது பலபிரம
   ராட்சதர்கள் மிண்டுகள் செயும்

ஏவற் பசாசுநனி பேயிற் பசாசுகொலை
   ஈனப் பசாசு களையும்

கரி முருடு பெரியமலை பணையெனவும் முனையின்உயர்
   ககனமுற நிமிரும் வெங்கட்

கடிகளையும் மடமடென மறுகியல றிடஉகிர்க்
   கரத்தடர்த் துக்கொத் துமாம்

தரணிபல இடமென்வன மதகரிகள் தறிகள்பணி
   சமணர்கிடு கிடென நடனம்

தண்டைகள் சிலம்புகள் கலின்கலினெ னச்சிறிய
   சரணஅழ கொடுபுரி யும்வேள்

திரிபுரம தெரியநகை புரியும்இறை யவன்மறைகள்
   தெரியும்அரன் உதவு குமரன்

திமிரதின கரமுருக சரவண பவன்குகன்
   சேவற் றிருத்து வசமே.

......... சொற்பிரிவு .........

எரி அனைய வியன் நவிரம் உள கழுது பல பிரம
   ராட்சதர்கள் மிண்டுகள் செயும்

ஏவல் பசாசு நனி பேயிற் பசாசு கொலை
   ஈனப் பசாசுகளையும்

கரி முருடு பெரியமலை பணை எனவும் முனையின் உயர்
   ககனமுற நிமிரும் வெங்கண்

கடிகளையும் மடமடென மறுகி அலறிட உகிர்
   கரத்து அடர்த்துக் கொத்துமாம்

தரணிபல இடம் என வன மத கரிகள் தறிகள் பணி
   சமணர் கிடு கிடு என நடனம்

தண்டைகள் சிலம்புகள் கலின்கலின் எனச் சிறிய
   சரணம் அழகொடுபுரியும் வேள்

திரிபுரம் அது எரிய நகை புரியும் இறையவன் மறைகள்
   தெரியும் அரன் உதவு குமரன்

திமிர தினகர முருக சரவணபவன் குகன்
   சேவல் திருத் துவசமே.

......... பதவுரை .........

எரி அனைய ... நெருப்பு போல் தோன்றி,

வியன் ... படர்ந்துள்ள,

நவிரம் உள கழுது ... தலை முடிகளை உடைய பேய்கள்,

பல பிரம்ம ராட்சதர்கள் ... பலவகைப்பட்ட பிரம்ம ராட்சதர்கள்,

மிண்டுகள் செயும் ... குறும்புகள் செய்யும்,

ஏவல் பிசாசுகள் ... பிறரால் ஏவப்பட்ட பிசாசுகள்,

நனி பேயில் பிசாசுகள் ... தனித் தன்மைகள் வாய்ந்த பிசாசுகள்,

கொலை ஈனப் பிசாசுகளையும் ... கொலைகளைப் புரியும் துஷ்ட
பிசாசுகளையும்,

கரி ... கரு நிறம் வாய்க்கப்பெற்று,

முரடு ... கரடு முரடான,

பெரிய மலை ... பெரிய மலை போலவும்,

பணை எனவும் ... மூங்கில்கள் போலவும்,

முனையின் ... முயன்று,

உயர் ககனமுற நிமிரும் ... உயர்ந்து ஆகாச வரையிலும் நிமிர்ந்து
நிற்கும்,

வெங்கண் கடிகளையும் ... கொடிய பார்வையை உடைய
பூதங்களையும்,

மட மடென மருகி அலறிட ... மட மட என்கிற சப்தத்துடன்
பயந்து அலறும்படி,

உகிர்தடர்ந்து கொத்துமாம் ... கையில் உள்ள நகங்களால்
கொத்தித் தாக்கும்.

(அது எது என வினவினால்)

தரணி பல இடம் என ... பல மலைப் பிரதேசங்களில் வசித்து வந்த,

வன மத கரிகள் ... மதம் பிடித்த காட்டு யானைகள் போலவும்,

தறிகள் ... தூண்கள் போலவும்,

பணி ... வாழ்க்கை நடத்தி வந்த,

சமணர் கிடு கிடு என ... அமணர் கூட்டம் கிடு கிடு என
நடுங்கும்படி,

தண்டைகள் சிலம்புகள் ... காலில் அணிந்துள்ள தண்டைகளும்
சிலம்புகளும்,

சிறிய சரண அழகொடு நடனம் புரியும் வேள் ... தனது சின்ன
திருவடிகள் அழகு பெறும்படி நர்த்தனம் புரியும் ஞானசம்பந்தப் பெருமான்,

திரிபுரம் அது எரிய ... முப்புரங்களும் எரிந்து சாம்பலாகும்படி

நகை புரியும் இறையவன் ... புன்முறுவல் பூத்த இறைவரும்,

மறைகள் தெரியும் அரன் ... வேதங்களால் அறிவிக்கப்படும்
சிவபெருமான்,

உதவு குமரன் ... உலகத்திற்கு நன்மை செய்யும் பொருட்டு
அருளிய குமாரக் கடவுள்,

திமிர தினகர முருக ... அஞ்ஞான இருளை நீக்கும் ஞான
சூரியனான முருகன்,

சரவணபவன் குகன் ... நாணல் பொய்கையில் அவதாரம் செய்தவன்,
அடியார்களின் இதயக்குகையில் வீற்றிருப்பவன் ஆகிய குமாரக் கடவுளின்,

சேவல் திருத்துவசமே ... கொடியில் விளங்கும் சேவலே தான் அது.

......... விளக்கவுரை .........

   மதகரிகள்

கரிய நிறங்கொண்டு காடுகளில் திரியும் சமணர்களை மதயானை என
ஞானசம்பந்தப் பெருமான் கூறுவார். அது பாணியை அருணகிரியாரும்
இங்கு பின்பற்றுகிறார்.

   தறிகள்

திகம்பர சமணர்கள் என்கிற பிரிவினர் நிர்வாணமாக இருப்பர். இவர்கள்
இவ்வாறு நாணமில்லாமல் திரிவதினால் இவர்களை தூண் போல
இருக்கிறார்கள் என்கிறார்.

சேவல் விருத்தம் 2 - எரியனையவியன்

SEval viruththam 2 - eriyanaiyaviyan
 previous page
next page
 ஆரம்பம்  எண்வரிசை தேடல்  முழுப்பாடலுக்கு   மேலே 
home in PDF numerical index search all verses top

Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com

Kaumaram.com uses dynamic fonts.
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com

 download Free Azhagi software and Tamil fonts (SaiIndira) 
 download free Tamil fonts only (SaiIndira) 

... www.kaumaram.com ...

The website for Lord Murugan and His Devotees

 ஆரம்பம்   அட்டவணை   மேலே   தேடல்   பார்வையாளர் பட்டியலில் சேர்வதற்கு 
 பார்வையாளர் கருத்துக்கள்   உங்கள் கருத்து 
 home   contents   top   search   sign guestbook   view guestbook   join our mailing list 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2309.2021[css]