Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 36 - செச்சைய வாவி
Kandhar andhAdhi - sechchaiya vAvi
Kandhar andhAdhi - sechchaiya vAvi    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.191 
 WIKI_urai Song number: 36 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 36 ... செச்சைய வாவி   (முருகன் திருவடியில் சேர)

......... பாடல் .........

      செச்சைய வாவி கலயில்வல்வாயிடைச் சேடனிற்கச்
      செச்சைய வாவி பருகுஞ் சிகாவல செங்கைவெந்தீ
      செச்சைய வாவி விடுகெனுஞ் செல்வநின் றாளணுகச்
      செச்சைய வாவி னுயிர்வாழ் வினியலஞ் சீர்ப்பினுமே ...... 36

......... சொற்பிரிவு .........

செச்சைய, வாவு இகல் அயில் வல் வாயிடை சேடன் நிற்க

செ சைய ஆவி பருகும் சிகாவல, செம் கை வெம் தீ

செச்சைய வாவி விடுக எனும் செல்வ, நின் தாள் அணுக

செ சை அவாவின் உயிர் வாழ்வு இனி அலம் சீர்ப்பினுமே.

......... பதவுரை .........

செச்சைய ... வெட்சி மாலை தரித்திருப்பவனே,

வாவு ... தாவிப் பாய்கின்றதும்,

இகல் ... சர்ப்பங்களிடத்தில் பகையும்,

அயில் ... கூர்மை பொருந்திய,

வல் ... வலிய,

வாயிடை ... வாயினிடத்தில்,

சேடன் நிற்க ... பாம்பை வைத்துக் கொண்டு,

செ ... சிவந்த,

செய்ய ... மலையின் கண்,

ஆவி பருகும் ... அதனுடைய உயிரை உண்ணுகின்ற,

சிகாவல ... மயிலை வாகனமாக உடையவனே,

செம் கை ... (பரமசிவன் அக்னியைப் பார்த்து) உன்னுடைய சிவந்த கரத்தில்,

வெம் தீ ... இந்த வெப்பமான அக்னிப் பொறியை ஏந்திக் கொண்டு,

செச்சைய ... ஆட்டு வாகனத்தையுடைய அக்கினித் தெய்வமே,

வாவி விடுக ... சரவண தடாகத்தில் கொண்டு போய் விடு,

எனும் ... என்று சொல்ல (அங்கு உற்பவித்த),

செல்வ ... பாலகனே,

நின் தாள் அணுக ... உன்னுடைய திருவடிகளை நாங்கள் அடையும்படி,

சே ... செய்வாயாக

சை ... இகழ்ச்சிக்கு இடமான,

அவாவின் உயிர் வாழவு ... ஐம்புல ஆசையுடன் சேர்ந்த இந்த ஜீவ வாழ்க்கை,

இனி அலம் ... இனி மேல் நமக்கு வேண்டாம்,

சீர்ப்பினும் ... செல்வம் அதிகரித்தாலும்

(இனி அலம்)

......... பொழிப்புரை .........

வெட்சி மாலையை தரித்திருப்பவனே, சர்ப்பத்தை உண்ணும் மயில் வாகனனே, சிவபெருமானால் அளிக்கப்பட்ட அக்னி சரவணப் பொய்கையில் விடப்பட்ட உடன் அங்கு உதித்த குமாரக் கடவுளே, இனி நாங்கள் அதிக செல்வம் அடைந்தாலும் ஆசையில் அழுந்தி இந்த உடலை வளர்க்க மாட்டோம். உன்னுடைய திருவடியில் எங்களை சேர்த்துக்கொள்.

கந்தர் அந்தாதி - 36 - செச்சைய வாவி
Kandhar andhAdhi - sechchaiya vAvi
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - sechchaiya vAvi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]