KaumAra VElKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees
வள்ளிமலை
ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள்
வேல் மாறல்


Vallimalai
Sri SachithAnantha SwAmigaL
VEl MARal
Sri Kaumara Chellam
 முகப்பு   PDF   தேடல் 
home search
Chennai Mrs Revathy Sankaran
'சென்னை'
ரேவதி சங்கரன்

'Chennai'
Mrs Revathy Sankaran

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை,
சேலம்

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha,
Salem

வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய   'வேல் மாறல்'

       ... வேலும் மயிலும் துணை ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

( ... இந்த அடியை முதலில் 12 முறை ஓதவும் ... )

( ... பின்வரும் ஒவ்வோரடியின் முடிவிலும் "திரு" என்ற
இடத்தில் மேற்கண்ட முழு அடியையும் கூறவேண்டும் ... )

  1. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
        கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
        விழிக்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

  2. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
        விருத்தன்என(து) உளத்தில்உறை
        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ... ... ... ( ... திரு ... )

  3. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
         அடுத்தபகை அறுத்(து)எறிய
         உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ... ... ... ( ... திரு ... )

  4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
         தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
         கழற்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

  5. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
         கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
         களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ... ... ... ( ... திரு ... )

  6. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
         குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
         கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ... ... ... ( ... திரு ... )

  7. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
         நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
         எனக்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... )

  8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
         வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
         விதிர்க்கவளை(வு) ஆகும் ... ... ... ( ... திரு ... )

  9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
         கவிப்புலவன் இசைக்(கு)உருகி
         வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... )

10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
         முளைத்த(து)என முகட்டின்இடை
         பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... )

11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
         ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
         ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... )

12. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
         வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
         அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... )

13. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
         ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
         நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ... ... ... ( ... திரு ... )

14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
         குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
         அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... )

15. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
         தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
         இடுக்கண்வினை சாடும் ... ... ... ( ... திரு ... )

16. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
         பெருத்தகுடர் சிவத்ததொடை
         எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ... ... ... ( ... திரு ... )

17. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
         தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
         இடுக்கண்வினை சாடும் ... ... ... ( ... திரு ... )

18. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
         பெருத்தகுடர் சிவத்ததொடை
         எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ... ... ... ( ... திரு ... )

19. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
         ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
         நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ... ... ... ( ... திரு ... )

20. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
         குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
         அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... )

21. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
         ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
         ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... )

22. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
         வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
         அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... )

23. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
         கவிப்புலவன் இசைக்(கு)உருகி
         வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... )

24. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
         முளைத்த(து)என முகட்டின்இடை
         பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... )

25. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
         நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
         எனக்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... )

26. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
         வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
         விதிர்க்கவளை(வு) ஆகும் ... ... ... ( ... திரு ... )

27. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
         கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
         களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ... ... ... ( ... திரு ... )

28. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
         குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
         கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ... ... ... ( ... திரு ... )

29. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
         அடுத்தபகை அறுத்(து)எறிய
         உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ... ... ... ( ... திரு ... )

30. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
         தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
         கழற்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

31. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
        கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
        விழிக்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

32. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
        விருத்தன்என(து) உளத்தில்உறை
        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ... ... ... ( ... திரு ... )

33. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
         தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
         கழற்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

34. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
         அடுத்தபகை அறுத்(து)எறிய
         உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ... ... ... ( ... திரு ... )

35. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
        விருத்தன்என(து) உளத்தில்உறை
        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ... ... ... ( ... திரு ... )

36. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
        கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
        விழிக்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

37. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
         வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
         விதிர்க்கவளை(வு) ஆகும் ... ... ... ( ... திரு ... )

38. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
         நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
         எனக்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... )

39. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
         குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
         கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ... ... ... ( ... திரு ... )

40. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
         கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
         களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ... ... ... ( ... திரு ... )

41. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
         வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
         அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... )

42. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
         ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
         ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... )

43. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
         முளைத்த(து)என முகட்டின்இடை
         பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... )

44. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
         கவிப்புலவன் இசைக்(கு)உருகி
         வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... )

45. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
         பெருத்தகுடர் சிவத்ததொடை
         எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ... ... ... ( ... திரு ... )

46. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
         தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
         இடுக்கண்வினை சாடும் ... ... ... ( ... திரு ... )

47. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
         குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
         அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... )

48. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
         ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
         நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ... ... ... ( ... திரு ... )

49. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
         குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
         அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... )

50. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
         ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
         நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ... ... ... ( ... திரு ... )

51. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
         பெருத்தகுடர் சிவத்ததொடை
         எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ... ... ... ( ... திரு ... )

52. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
         தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
         இடுக்கண்வினை சாடும் ... ... ... ( ... திரு ... )

53. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
         முளைத்த(து)என முகட்டின்இடை
         பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... )

54. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
         கவிப்புலவன் இசைக்(கு)உருகி
         வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... )

55. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
         வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
         அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... )

56. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
         ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
         ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... )

57. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
         குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
         கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ... ... ... ( ... திரு ... )

58. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
         கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
         களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ... ... ... ( ... திரு ... )

59. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
         வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
         விதிர்க்கவளை(வு) ஆகும் ... ... ... ( ... திரு ... )

60. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
         நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
         எனக்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... )

61. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
        விருத்தன்என(து) உளத்தில்உறை
        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ... ... ... ( ... திரு ... )

62. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
        கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
        விழிக்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

63. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
         தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
         கழற்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

64. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
         அடுத்தபகை அறுத்(து)எறிய
         உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ... ... ... ( ... திரு ... )

65. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
        விருத்தன்என(து) உளத்தில்உறை
        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ... ... ... ( ... திரு ... )

( ... முடிவிலும் இந்த அடியை 12 முறை ஓதவும் ... )

        தேரணி யிட்டுப் புரம் எரித் தான்மகன் செங்கையில்வேற்
        கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
        நேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப்
        பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.

        வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட
        தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
        குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
        தொளைத்தவேல் உண்டே துணை.

       ... ... ... வேலும் மயிலும் துணை ... ... ...

VEl MARal MahA Manthiram by Vallimalai Sri SachithAnantha SwAmigaL


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  




Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in https://kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top