Murugan Temple GopuramKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

உலகளாவிய
முருகன் ஆலயங்கள்

Worldwide
Murugan Temples

Sri Kaumara Chellam
Sri Sivasubramaniyar Swami Tirukovil, - U.P.M. Serdang, Malaysiaஸ்ரீ சிவசுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில்
யு.பி.எம். செர்டாங் செலாங்கூர் மாநிலம் மலேசியா

Flag of Malaysia  Sri Sivasubramaniyar Swami Tirukovil,  Flag of Selangor State
U.P.M. Serdang Selangor Malaysia
history address timings special events previous-other names location map
... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 



இத்தலத்தின் முன்னாள்/மற்ற பெயர்கள்
Previous-Other names of this Venue

ஆலயத்தைப் பற்றி
About the temple

தெரிந்த வரலாறு

கடந்த நூற்றாண்டில் மலாயாவில் வேலை செய்ய பலர் தமிழ் நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டனர். அவ்வகையில் இப்பொழுது கோயில் எழுந்தருளியுள்ள இடத்தில் (அப்பொழுது அதன் பெயர் விவசாய இலாகா அல்லது செர்டாங் பூமலை) பலர் குடியேறினர். அதில் ஒருவர்தான் திரு. மலையாண்டி மண்டோர் அவர்கள். 1940-ஆம் ஆண்டுக்கு முன் ஒரு சிறு வேல் ஸ்தாபனம்செய்து அங்கு வழிபட்டு வந்தார். 1940-ஆம் ஆண்டுக்கு பிறகு மேலும் பலர் இங்கே குடியேற இந்த வேல் இருந்த இடமே வழிபாடு இடமாக மாறியது. சிறிய அளவிலான ஒரு கோயிலை கட்டி வழிபட்டு வந்தனர்.

1950-ஆம் ஆண்டுவாக்கில் திரு. மலையாண்டி மண்டோர் வேலை ஓய்வு பெற்று தமிழகம் சென்றுவிட்டார். அவருக்குப் பிறகு திரு. சிவலிங்கம் கிராணியார் அவர்கள் இந்த கோயிலைப் பராமரித்து வந்தார்கள். கோயில் முன்பு இருந்ததைவிட சிறிது பெரியதாக கட்டப்பட்டது. இச்சமயத்தில் கோயிலின் சிறப்பு மேலோங்கியது. திரு. சிவலிங்கம் கிராணியார் அவர்களும் 1958-ஆம் ஆண்டுவாக்கில் வேலை ஓய்வு பெற்று ஸ்ரீலங்கா சென்று விட்டார். அவருக்குப் பிறகு இதே இடத்தில் HA வாகப் பணிபுரிந்து வந்த மயில்வாகனம் அவர்கள் கோயில் பராமா¢க்கும் பொறுப்பை ஏற்றார். கோயிலை மேலும் சிறப்படையச் செய்தார். 1961 ஆண்டில் சிறிய அளவில் கும்பாபிஷேகம் செய்து பிரதான மூல விக்கிரமாக வேல் ஸ்தாபனம் செய்யப்பட்டது.

இதே காலக்கட்டத்தில் "செர்டாங் பூமலை" வட்டாரத்தில் ஆங்காங்கே பல சிறிய கோவில்களும் அமைக்கப்பட்டிருந்தன. அதே இடத்தில் அம்மன், வேறொரு இடத்தில் கிருஷ்ணர் (இராமர்), கணபதி இப்படியாக இருந்தது. இதனைக் கவனித்த அரசாங்க விவசாய அதிகாரி எல்லா கோயில்களையும் ஒரே இடத்தில் வைத்து வழிபாடு செய்யுங்கள் என்று கட்டளையிட்டார். நமது முன்னோர்கள் இதற்கு தனி இடம் தேவை என்று வாதாடினர்.

உடனே, டாக்டர் மயில்வாகனம் தலைமையில் இயங்கும் சுப்ரமணியர் கோயில் இடத்தையே பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று அதிகாரி கூறிவிட்டார். ஆக, எல்லா விக்கிரகங்களையும் ஒரே இடத்தில் வைக்க புதிய கோயில் கட்டப்பட்டது. அரசாங்கமும் அப்பொழுது அமைச்சராக இருந்த டான்ஸ்ரீ மாணிக்கவாசம் அவர்களின் உதவியுடன் மான்யம் RM25,000 கொடுத்தது. எல்லா விக்ரகங்களையும் (முருகன், கணபதி, அம்பாள், கிருஷ்ணர், நவக்கிரகம், பைரவர்) உள்ளடக்கிய பெரிய கோயில் கட்டப்பட்டது. 1966-ஆம் ஆண்டில் முறைப்படி முதலாவது மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

டாக்டர் மயில்வாகனம் அவர்கள் வேலை ஒய்வு பெற்று ஸ்ரீ லங்கா சென்றுவிட்டார். அவரைத் தொடர்ந்து திரு. வை. பெரியசாமி PPN. அவர்கள் கோயில் தலைமை பொறுப்பை 1967-ஆம் ஆண்டு ஏற்றார். வழக்கம் போல் எல்லா பூஜைகள் உபயங்கள் சிறப்பாக நடைபெற்று வந்தது. 1978-ஆம் ஆண்டு கோயிலின் 2 வது மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 1990-ஆம் ஆண்டில் 3 வது மகா கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. காரணம் கோயில் கட்டிடத்தில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டது. விரிசலின் காரணமாக பாதுகாப்பு பிரச்சனை எழுந்தது. கோயில் நிர்வாகம் விரிசல் ஏற்பட்ட மூலஸ்தான பகுதிகளை மட்டும் சீர்படுத்திய பிறகு கும்பாபிஷேகத்தை நடத்த முடிவு செய்தது திரு. முத்துவேல் சின்னா தலைமையில் இயங்கிய கோயில் நிர்வாகம். அதன்படி விக்கரகங்கள் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு, பழைய மூலஸ்தான பகுதி உடைக்கப்பட்ட பொழுதுதான் தெரிய வந்தது கட்டிடம் முழுவதுமே மோசமான நிலையில் உள்ளது என்று.

ஆக முழு பகுதி கட்டிடத்தையும் உடைத்துவிட்டு புதிய கொயில் கட்டும் பணி 1995-ஆம் ஆண்டில் துவங்கியது.

இதற்கிடையே விவசாய அமைச்சுக்கு பல ஆதாரமற்ற புகார்கள், பல பெட்டிசன்கள் அனுப்பப்பட்டது. அவர்களும் உடனே திருப்பணி வேலையை நிறுத்தச் சொல்லி, பேச்சு வார்த்தை நடத்த அழைத்தனர். எல்லா பேச்சுகளும் முடிவு பெற்று இருதியில் அவர்களே கோயில் கட்ட அதிகாரப்பூர்வ அனுமதி கடிதத்தையும் கொடுத்துவிட்டனர்.

மீண்டும் 1997-ஆம் ஆண்டில் திருப்பணி வேலை ஆரம்பித்து இவ்வருடம் (2000) முடிவு பெற்று, இப்பொழுது மஹாகும்பாபிஷேகம் காண்கிறது.

தொகுப்பு:

முத்துவேல் சின்னா
கோயில் நிர்வாகத் தலைவர்.


ஆலயத்தின் சிறப்பு விழாக்கள்

special occasions at temple

1. பங்குனி உத்திரம் (10 நாட்கள்)
2. கந்த சஷ்டி (7 நாட்கள்)
3. செப்டெம்பர் 2வது வெள்ளிக்கிழமையில் ஆண்டுத் திருவிழா

1. Panguni Uththiram (10 days festivities)
2. Kandha Sashti (7 days festivities)
3. Anniversary on 2n Friday of September



ஆலய நேரங்கள்

temple timings

5:30 am – 9 am
5 pm – 9 pm


ஆலயத்தின் முகவரி

Address of temple

Kuil Sri Siva Subramaniar Temple Paribalana Sabhai,
U.P.M.
Serdang,
Selangor,
MALAYSIA
Postcode: 43400

Mailing Address:

Kuil Sri Siva Subramaniar Temple Paribalana Sabhai,
Pusat Pengeluaran Tanaman,
Beg Berkunci 229, Pejabat Pos U.P.M.,
Serdang,
Selangor
Postcode: 43400


ஆலயம் இருக்கும் இடம்
(கூகள் மேப்ஸ்க்கு நன்றி)

temple location
(courtesy of Google Maps)

scan the QR image on the right,
using a QR reader app on your
smart phone to copy the GPS co-ordinates
2.998641, 101.701490

Sri Sivasubramaniyar Swami Tirukovil, - U.P.M. Serdang, Malaysia

For help in making this:  PC  -  Android  -  IPHONE & IPAD 
இந்த ஆலயத்தைப்பற்றி மேலும் விவரங்கள் தங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து
அவற்றை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மிக்க நன்றி ... இணைய ஆசிரியர்கள்.
send note to Kaumaram Webmasters

A kind request from the Webmasters of Kaumaram.com
Please send us other details about this temple.
Thank You.
மலேசியா சிங்கப்பூர் இந்தியா மொரீஷஸ் இலங்கை ஐரோப்பா மற்ற நாடுகள்
Malaysia Singapore India Mauritius Sri Lanka Europe Other Countries

Worldwide Murugan temples and temples with Murugan Sannithis
Sri Sivasubramaniyar Swami Tirukovil, - U.P.M. Serdang, Selangor, Malaysia
(kdcmyb23)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

-[W3]-