பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/696

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ88 திரு எழு கூற்றிருக்கை (687ஆம் பக்கம் உரைத் தொடர்ச்சி) கொண்டையை உடையதுமான, அன்றில் கிரெளஞ்சப் பறவையின் பெயர் கொண்ட கிரி - ம்லை இரண்டு பிளவு ஆகும்படி ஒப்பற்ற ஒரு வேலைப் பிரயோகித்தாய், காவிரியின் வடகரையில் உள்ள ரி - குருமலை எனப்பெயர் கொண்ட சுவாமிமலையில் (திருஏரகத்தில்) குடி கொண்டுள்ளவர்களும், உனது திருமந்திரமாகிய குமாராய நம்' என்னும் சடாக்ஷரமந்திரம் ஒ துபவர்களுமாகிய அந்தணர்கள் உன து திருவடியிணையைப் போற்ற, ஏரகத்து இறைவன்" என்னும் திருப்பெயருடன் விளங்கி வீற்றிருக்கின்றாய். (686-ஆம் பக்கம் குறிப்புத் தொடர்ச்சி) மதம் என மூன்று மதநீர் ஏற்பட்டது: மும்மதத்தன் என்றொரு பெயர் தனக்கும். உறுத்தவன்" - தணிகைப் புரா, காப்பு: இனி 10. ஐந்தெழுத்திலே - பஞ்சாக்ஷரத்திலே - நான்கு வேதப் பொருள்களும் அடங்கும் என்பதை உணர்த்தும் முக்கட் பெருமான் எனவும் பொருள் காணலாம். "மந்திர நான்மறையாகி... ஆள்வன. அஞ்செழுத்துமே". சம்பந்தர் 3.222 வேத நான்கினும் மெய்ப் பொருளாவது நமச்சிவாயவே" - சம்பந்: 3-49.1 11. "தீவினைக்கோர் மருந்தாவான்". சம்பந்தர். 2-43-11 12. தந்தைக்கு குரு - 1178 ஈற்றடி 13. உமை முலை உண்டது - திருப்புகழ். 110. பக்கம் 260 குறிப்பு 14. தாரை. அகிலமும் ஒதா துணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான் என ஊத பெரிய புரா. ஞானசம்பந்தர். 223 15. சம்பந்தர் - தன்னை இறைவனது ஒளி எனக் கூறியுள்ளார் "கருக்குடி மைந்தன் தன்னொளியான. சம்பந்தன்" - சம். 3-21-11 ஆதலால் இறைவன் தன்மை சம்பந்தர்க்கும் உண்டு. புலன்கள் வென்றவன் எம் இறைவன்". சம்பந்தர். 3-61-7 16. சம்பந்தர் - அறுமுகன் தோற்றம் - திருப். 841 அடி 5, 8 17 அன்றில் அங்கிரி = குருகு பெயர்க் குன்றம் - கிரெளஞ்ச கிரி "குருகு பெயர்க் குன்றம் கொன்ற நெடுவேலே". சிலப்பதி, குன்றக்குரவை "அன்றிலம் பேர் பெற்றுள்ள அவுணன்". கந்த புரா. 2-24-1 18 ஏரகத்தில் ஆறெழுத் தந்தணர் முருகனைத் துதிப்பது . இரு பிறப்பாளர். ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி. நாவியன் மருங்கில் நவிலப்பாடி. பொழுதறிந்து துவல. மகிழ்ந்து ஏரகத் துறைதலும் உரியன்" - திருமுரு. 186.9.