பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 553 கல்லை (விடாது) அது போகும் வழியில் விடாது - நிலைப்படுத்தி, உற்ற திசை - பொருந்தியுள்ள oலு திசைகளில் .. பெரியோர்கள் (சொல்) சொல்லியுள்ள, விசாரத் து - ஆராய்ச்சி களின் பயனாக (மெய்கள் தோணி) உண்மைப் பொருள்கள் தோன்றி விளங்கிப், பிறவியாகிய அலைகடலை - (அல்லது ஆராய்ச்சியின் பயனாக ஏற்படும் மெய்களே - உண்மைகளையே (தோண்) படகாகக் கொண்டு பிறவியாகிய அலைகடலை) மெதுவாக (ஏறி) கடந்து - தாண்டி, குராமலர், (வெள்ளில்) விளா இலை (ஆர்) ஆத்தி, வெட்சி (தன) தண் அ குளிர்ச்சி பொருந்திய முல்லை, (வேர்) குறுவேர், (உற்பலம்) நீலோற்பலம் (முளரி) தாமரை (நீபம்) கடம்பு (வில்லம்) வில்வம், நீள் - பெரிதும், (பொன்) அழகுள்ளதும் (கனகம்) பொன்போல ஒளி வீசுவதுமான (அல்லி) ஆம்பல் முதலிய நீர்ப்பூக்களை (மேலிட்டு) உனது திருவடியின் மீது இட்டு, அல்லது வில்வம் முதலியவற்றை (நீள்பொற் கணக ...”- பெருமை மிக்க (பொன்) அழகுள்ளதும்) (கனகம்) பொன் போன்றதுமான (அல்லி) உனது திருவடித் தாமரையின்மீது சொரிந்து, உனது சொல்லை (புகழை) - உரைத்து, உன்னைப் பணியும்படியான ஒருநாள் எனக்குக் கிட்டுமா (அல்லது உனது சொல்லை - நீ சம்பந்தராய்த் திருவாய் மலர்ந்த தேவாரப் பதிகங்களை ஒதிப் பணியும் ஒரு பாக்கிய நாள் எனக்குக் கிட்டுமா) ள்ளம் - வீறிட்டு எமம் (மால் ctofctКТТ ■ వLQకిథే (ஃ (Լք ; ( ఫిలోபுள்ளி '..!? ಪ್ಲೀಚ್ಟೆ (வெற்பு) வள் மலையில் (உதவு) பெற்ற வள்ளியம்மையாம்_ம்ான் போன்ற நங்கையினிடம் (மயல்) காத்ல் மொழிகளைப் பேசினவனே! (தொல்) பழமையான (வியாளத்து) பாம்பாகிய ஆதிசேடன் மீது (வளர்) கன் வளரும் - துயில் கொள்ளும் செல்வராம் திருமாலும் * (யாகத்து அரையன்) வேள்வி நாயகன்ான இந்திரனும் எல்லையே காண்பதற்கு அரியராகியசிவபிரானுக்குக் குருநாதனே!

  • யாகத்து அரையன் = யாகவேந்தன், மகபதி = இந்திரன். யாகங்கள், ஐவகைய = பிரமம், தெய்வம், பூதம், பிதுர், மானுஷம் என்பன. பிரம யாகம் = வேதம் ஓதுதல், தெய்வயாகம் = ஓமம் வளர்த்தல், பூத யாகம் = பலியிதல், பிதுர் யாகம் = தர்ப்பணம் செய்தல், மனுஷ யாகம் = இரப்போருக்கு அளித்தல். வேதம் ஓதுதல் பிரம யாகம் எனப்ப டுதலால் யாகத்து அரையன் = பிரமன் எனவும் எடுத்துக் கொள்ளலாம்.