பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப் புகழ் உரை 525 1217. காதில் உள்ள இரண்டு குழைகளின் மீதிலும் (தாவடி இடுவன) தாவிப்போர் புரிவனவும் (ஓதி நீழலினிடமது) கூந்தலின் நிழலிடத்தே உலவி மீண்டு வருவனவும், நெற்றியின் கீழ்த் தாவி (ஏறியும்) (இழிவன) இறங்குவனவாய் உள்ளனவும், காம வேதமும் மொழிவன - காம சாத்திரத்தைக் (கொக்கோக சாஸ்த்திரத்தை) எடுத்து உரைப்பனவும், (தாரை) கூரிய வேல் பாய்வது போலப் பாய்வனவும், காள கூட விஷத்தையும் - ஆலகால விஷத்தையும் அமிர்த மாக்க வல்ல காள கூட விஷத்தையும் அமுது என்று சொல்லும் படியான விஷத்தன்மையை உடைய கரிய நீல நிறத்த கண்களை உடைய (அபிநய மாதரார்) கூத்தாடு மங்கையர் (நாடகக் கணிகையர்) தருகின்ற (கலவியில்) புணர்ச்சியின்பத்தில் முழுகி வாடிக்கிடக்கும் தனியனாகிய திக்கற்ற நானும் நற்கதி பெற, ஈடு பெருமை (அறாதன) நீங்காத பதி - கடவுள் (பசு) உயிர் (பாச்ம்) தளை அல்லது கட்டு எனப்படும். இம்மூன்றின் இலக்கணங்களைக் (கசடு அற) ஐயம் - அற்ற வகையில் (வேறு வேறு செய்து) - தனித்தனியாக விளக்கிப் பிரிவு செய்து உபதேசித்து - அருளுவாயாக. பச் பாரமான (மோலியும்) மணி முடிகளும், L/ தோள் %jo மலைகளும் (:தி: வீழ்) கடலில் படையுடனே போப் அம்பைச் செலுத்தின ராமனுடைய (திருமாலின்) ു് (விபூதி .ದ್ನಿಸಿ:go :ç: உண்ர்ந்து த்ொள்ள் உபதேசம் செய்த (தேசிக குரு மூர்த்தியே!) (வரை) வள்ளி மலையில் (ஏனல்) தினைப்புனத்தே (உன்னைக்) குலதெய்வமாகப் போற்றிப் பரவி வந்த (அல்லது வள்ளிமலையில் தின்னப்ரந்து வளர்ந்திருந்த) காட்டு வேடர்வளர்த்த அழகிய வள்ளி நாயகியின் சிலம்ப்னிந்த திருவடியைத் தலையிற் சூடினவனே தேவராஜனாம் - இந்திரனுடைய, பதி - ஊராகிய பொன்னுலகத்தில் தேவர்கள் குடியேற வேலாயுதத்தைச் செலுத்தின முருக்னே மயில் வாகனனே மிக்க ஆனந்த நிலையில் இருக்கும் ஞான யோகியர்களின் பெருமாளே! (கதிபெற அருள்வாயே) ஞானம், மெய்யுணர்ச்சி, அனுபவ ஞானம், உண்மை அறிவு (தொடர்ச்சி 526-ஆம் பக்கம் பார்க்க)