பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ווו ருெப் |க| அ1 الدامها ருபடி களு புதுமை வெங்க வ களில் (ப) வள்ளியின் கொடிபோன்ற இ ைதாவுறுபடி வான்ெற கஸ்துரி அணிந்த நறுமணமுள்ள in , பெ. (I, ! போன்ற, புளகிதங் கொன பெங்கைகளாகிய பலகளை அணைந்து தழுவின திரண்ட தோள்களும் | மொகுமெழுகு என்னும் ஒலியுடன் வண்டுகள் ஒலிக்கின்ற குராமலரைஅணியும் முருகன், ஆறுமுகன் என்றெல்லம் வருவனவாகிய உனதுதிருநாமங்கள் முழுமையும் இயற்றமிழில் அமைத்துக் குற்றமிலர் வகையில் சொல்லும்படியன (பாக்கிய) நாள் ஒன்று எனக்குக் கிடைக்குமா? பொல்லாத கொடிய கொலைகளைச் செய்யும் அசுரர் களுடைய மார்புடனே (குமுகுமென விசையுடன் இசைபெற) குழுகுமென இசை பெற ಸಿÏå - குமுகுமு வென்னும் ஒலியுண்டாம்படி வேகத்துடன்ே நிரம்ப் ரத்தம் - நதி (வெள்ளம்) என்னும்படித் தாளத்துடனே குதித்துப் பாய்ச்சல் கொள்ளவும், பிர்மன் அஞ்சி ஒடவும், கலங்கி ஒலிக்கும் கடலின் (குடல்) உட் பாகங்கள் கிழிபடவும் (அடுமரம்) கொல்லுந் தன்மையுடைய சூரனாகிய மாமரம் (அல்லது) (வடுமரம்) வடுமா காய்க்கும் சூரனாகிய மாமரம், மொளுமொளென்று அடிப்பாகம் முதல் அலறி விமுவும், உயர்ந்து வளர்ந்திருந்த பறவையின் பெயர் கொண்ட மலை - கிரெளஞ்ச கிரி தொளைபடவும் செலுத்தின ஒளிகொள் வேலனே! இடியும், கூர்மை மிகுந்த குலிசாயுதமும், விளக்கங் கொண்டதும் - ஆதி|திT Tது ஊண் உண்பதும் வெண்ணிறமுடையதும் அழகுள்ளதும், பரந்ததுமான - மதச்சுவட்டினின்று மிகுந்த மதம் பொழிவதுமான (இபம்) ஐராவதம் என்ற வெள்ளை யானையும் (இரணிய தரணியும்) பொன்னுலகமும் இவை தமைச் சொந்தமாகக் கொண்ட ஒரு ஒப்பற்ற (யானை) தேவசேனைக்குத் தலைவனே! குருபரமூர்த்தியே! சரவண பவனே! பல முகமாய்ப் பரந்துவரும் ஆகாச கங்கையும், கிருத்திகை மாதாக்கள் அறுவரும் எங்கள் குழந்தை என்று பாராட்டும்படி உமை யம்மை தந்தருளிய பெருமாளே தேவர் பெருமாளே! (பெயர் முழுதும் பழுதறமொழிவது ஒருநாளே)