பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 முருகவேள் திருமுறை 17 - திருமுறை இனிமை தருமொரு தனிமையை மறைகளின் யாவகியி டவரிய பெறுகியை t 4. *à::: வே வெளிபட மொழிவாயே அசல குலபதி தருமொரு திருமகள் அமலை :விமலைக ளெழுவரும் வழிபட அருளி அருணையி லுறைதரு மிற்ையவ ாபிராமி. "பெறுதி = பேறு. tஇருமை ஒருமையில் பெருமை (இதைக்குறித்த ஒரு விசேடத்தைச் சேய்த் தொண்டர் புராணத்தில் 76. சச்சிதானந்தநாயனார் புராணம் பாடல் 171-பக்கம் 516 பார்க்க சிவம் - சக்தி இருமை பிணை பெனொ டொருமையின் இருமையும்' உடைய (ண்) ணல். இடைமருதே சம்பந்தர் 1-1213 தொல்லை முதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள் - திருப்புகழ் 389-பக்கம் 480 - கீழ்க்குறிப்பு. இருமை ஒருமை " எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்" என்றதனால் ஒருமை (சித்தியார் சுபக்கம் -165) " இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்" என்பது சம்பந்தப் பெருமான் அருளிய திரு எழு கூற்றிருக்கை I ப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை". இது திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 'இரண்டு நீக்கி ஒன்று நினைவோர்க்கு உறுதியாயினை". நக்கீரர் திரு எழு கூற்றிருக்கை இனி, இருமை ஒருமையில் பெருமை என்பது ஜீவாத்மா பரமாத்மா என்னும் இரண்டில் ஜீவாத்மா - பரமாத்மாவுடன் கலந்து ஒன்றாவதின் பெருமை. ஜீவன் சிவனுடன் கலந்து ஒன்றாயின் அதனால் வரும் பெருமை யாதோ எனில் - அங்கனம் கலந்திடின் மும்மலமும் கெடும் என்பதே இது. " ஒன்றிரண் டாகிநின் றொன்றியொன் றாயினோர்க் கொன்றும் இரண்டும் ஒருகாலுங் கூடிடா" எனவரும் திருமந்திரத்தால் (2077) பெறப்படும். (ஒன்று - இரண்டு ஆகி சிவன் - ஜீவன் என இரண்டாகி, ஒன்றாயினோர் - சிவனோடு கலந்தோர்; ஒன்றும் இரண்டும் என்பது மும்மலம்.) பின்னும், இருமை - சிவம் - சக்தி என்னும் இரண்டின்-சிவனுடைய (சிவத்தின் ஐந்து திருமுகங்களும் சக்தி பார்வதியின் ஒரு திருமுகமும் ஒருமை - ஒன்றுபட்டு - (ஆறுமுகம் கொண்ட) ஒரு திருவுருவமான பெருமையை - (ரகசியப்) பொருள் மாட்சியை வெளிச்சமாம்படி 2