பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 377 ஆய வேண்டிய நூலறிவு இல்லாத நானும் மேற்சொன்ன வழிக்கு வேறுபட்டவனல்ல அந்த வழியில்; ஆகையால் அவையடக்கப் பேச்சுப்போல நான் சொன்ன உரையாகும் இது. கஷ்ட திசையில் இருந்த தேவர்கள் அழைக்க, (ஐராவதம் என்னும்) ஆனையை_உடைய (வாசவன்) இந்திரன், ருத்ரன், (ஈசன்) பிரமன் (அல்லது) திருமால், (அல்லது ருத்ர ஈசன் - ருத்ர தேவன்) இவர்கள் மீது (வெயில் எறிக்க) சூரனுடைய வெயில் போன்ற கொடுமை தாக்க (மதி வேணி) நிலவு அணிந்த சடையை உடைய, (ஈசனார்) சிவபிரான் (தமது) தங்களுடைய (இடுக்கம் துன்பத்தை (உன்னைக் கொண்டு) (மாறியே) மாற்றியே நீக்கின. பின், கயிலை வெற்பில் இனிதிருக்க கயிலை மலையில் (கந்த மாதனத்தில்) இன்புற்றிருக்கத் தோன்றிய பெருமாளே! (வேழம் மீது ஐராவதத்தின்மீது வீற்றிருக்கும் (வஜ்ர தேவர்) வஜ்ராயுதத்தை (సేఫ్గ ஏந்திய (கோ) தலைவனாகிய இந்திரனுடைய சிறையை நீக்கியும், (வேதனாரையும்) பிரமனையும் (விடுத்து) சிறையினின்றும் விடுவித்தும், (முடிசூடி) இந்திரனுக்கு வானுலக அரசாட்சியைத் தந்து வீரமுள்ள சூரனுடைய (முடிக்குள்) தலையில் ஏறி கழகுகள் கொத்தும்படி - (அவன் உடலை அழிக்கவல்ல) பெருமை வாய்ந்த வில்லை எடுத்த பெருமாளே! 1158. சந்தனத்தையும் அதனுடன் கலந்த குங்குமத்தையும் (புனைந்து அணிந்த) பூசி அணிந்துள்ள கொங்கை (சந்திரம் ததும்ப அசைந்து) பொன்னொளி (பொன் ஆபரணங்களின் ஒளி மிக்கு வீச அசைந்து) தெருவிலே - (சங்கு ம் குலுங்க செங்கை எங்கிலும்) - செங்கை எங்கிலும் செவ்விய 9 (சங்கு சங்கினாற் செய்த கை : கூட்டம் ஒலி செய்ய, (பணிந்து உடம்பு பணிந்து உடம்பு - பணிவு காட்டும் தேகம் சந்தனத்துடன் துவட்சியுற்று அசைந்து வருவதுபோல (வந்து), அல்லது சந்து அ(ன்னம்) - சந்து - துாதுக்கு அமைந்த அன்னப் பட்சி துவட்சியுடன் அசைந்து வருவதுபோல் நடந்து வந்து): (கொந்தளம்) கூந்தலின் அசைய, (காலில்) நல்ல சிலம்பின் ஒலி நிறைந்து எழ. மையான (சுகங்கள்) சுகத்தைத் தரும் பேச்க்க்களைக் கொஞ்சிப் பேசிப், (பொன் தொடர்ந்திடும்) ப்ொற்காசு பெறுதற்கு வேண்டிய வழிகளைப் பின்பற்றி முயலுகின்ற (பொன் மடவார்) அழகிய மாதர் ன் தோள்களையும்,