பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 முருகவேள் திருமுறை 17 - திருமுறை 1006. அரிய பொருள் உணர தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனதான மேல குமிளித முலைமிசை துகிலிடு விகட கெருவிக ளசடிகள் கபடிகள் கலக மிடுவிழி வலைகொடு தழுவிக ளிளைஞோர்கள். கனலி லிடுமெழு கென நகை யருளிகள் அநெக விதமொடு தனியென நடவிகள் கமரில் விழுகிடு கெடுவிகள் திருடிகள் தமைநாடி அமுத மொழிகொடு தவநிலை யருளிய "பெரிய குணதர ருரைசெய்த மொழிவகை அடைவு நடைபடி பயிலவு முயலவு மறியாத அசட னறிவிலி யிழிகுல னிவனென இனமு மனிதரு ளனைவரு முரைசெய அடிய னிதுபட அரிதினி யொருபொரு ாருள்வாயே: திமித திமிதிமி டமடம டமவென சிகர கரதல டமருக மடிபட தெனன தெனதென தெனவென நடைபட முநிவோர்கள். சிவமி லுருகியு மரகர வெனவதி பரத பரிபுர மலரடி தொழஅது தினமு நடமிடு பவரிட முறைபவள் தருசேயே. குமர சரவன பவதிற லுதவிய தரும tநிகரொடு புலமையு மழகிய குழக குருபர னெனவொரு மயில்மிசை 4 வருவோனே.

  • அருணகிரியார் முன் செய்துள்ள பெருந் தபோ பலத்தை உணர்ந்த அருணாசலேசுரரே எனத் தோற்றிய தவப் பெரியார் ஒருவர் அருணகிரியாரிடம் வந்து "அன்ப! நீ தவ நிலையில் இருந்து ஆறுமுகக் கடவுளை இடைவிடாது தியானிப்பாயாக" என உபதேசித்துச் சென்றனர். அவ்வுபதேச மொழியைப்பின்பற்றாது சிலகாலம் இவர் வீணாக்கினார். இதையறிந்து இனத்தாரும் ஊராரும் ஏசியும் பேசியும் வருந்தினர். பெரிய குணதரர்" என்பது அருணாசலேசுரராகவே இருக்கலாம் - சிவ பிரானை