பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 முருகவேள் திருமுறை 17. திருமுறை அடரவரு போர்க்கை அசுரர்கிளை மாய்த்து அமரர்சிறை மீட்ட பெருமாளே (99) 1094. திருவடியைப் பெற தனணதன தனணதன தனணதன தனணதன தனனதன தனணதன தனதான அளகநிரை குலையவிழி குவியவளை கலகலென அமுதமொழி பதறியெழ அணியாரம் அழகொழுகு புளகமுலை குழையஇடை துவளமிக அமுதநிலை யதுபரவ அதிமோகம்: உளமுருக வருகலவி தருமகளிர் கொடுமையெனு முறுகபட மதனில்மதி யழியாதே *உலகடைய மயிலின்மிசை நொடியளவில் வலம்வருமு னுபயநறு மலரடியை அருள்வாயே: f வளையமலை கடல்சுவற விடுபகழி வரத#னிரு, மருதினொடு பொருதருளு மபிராமன். வரியரவின் மிசைதுயிலும் வரதஜய மகள் கொழுநன் மருகஅமர் முடுகிவரு நிருதேசர் தளமுறிய வரைதகர அசுரர்பதி தலைசிதற தகனமெழ முடுகவிடு வடிவேலா. தரளமணி வடமிலகு குறவர்திரு மகள்கணவ X சகலகலை முழுதும்வல பெருமாளே (100)

  • உலகை வலம் வந்தது. பாடல் 184 பக்கம் 430 கீழ்க்குறிப்பு 1 கடல்மீது பாணம் விட்டது. பாடல் 177-பக்கம் 112 வருண மந்திரம் ஜெபித்தும் வருணன் வந்து வழிவிடாததால், ஆரீராமர் கோபித்துக் கடல் சுவறப் பாணத்தை விட்டனர்:'எறிகடல் நெறிதனை மறுத்தால் நன்று நன்றென. சுடு சரம் எய்தான்". கம்பராமா - வருணனை வழி 9, 18 "ஆழியிற் புனலற மணிகள் அட்டிய பேழையிற் பொலிந்தன பரவை - 52
  1. மருதொடு பொருத து - பாடல் 14 3 பக்கம் -332-குறிப்பு. Xசகல கலை வல்லவர் - பாடல் 320 பக்கம் 296 கீழ்க்குறிப்பு.