பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 முருகவேள் திருமுறை (7- திருமுறை கனக பாவ னாகார "பவள கோம ளாகார - கலப சாம ளாகார மயிலேறுங். கடவு ளேக்ரு பாகார கமல வேத னாகார கருணை மேரு வேதேவர் பெருமாளே (6.1) 1056. வரவேணும் தனன தான தானான தனண தான தானான தனன தான தானான தனதான

  1. அதல சேட னாராட அகில மேரு மீதாட

அபின காளி தானாட அவளோடன். x றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட O அருகு பூத வேதாள LDборбшIIJITL—; மதுர வாணி தான்ாட மலரில் வேத னாராட மருவு வானு ளோராட மதியாட “முருகவேள் பவள நிறத்தினர். பாடல் 593-பக்கம் 360 குறிப்பு f கமல வேதன ஆகாரம் - இதய கமலத்திற் பொருந்திய ஞான சொரூபம்; வேதனம் = அறிவு.

  1. சம்பந்தாண்டான் என்பவனோடு அருணகிரியார் வாது செய்த பொழுது முருக வேளைப் பிரபுடதேவராஜனுடைய சபையில் வரவழைக்க அருணகிரியார் பாடின பாடல் இது.

அருணகிரியார் காலத்தில் திருவண்ணாமலையை ஆட்சி புரிந்திருந்த பிரபுட தேவராஜன் அவரிடம் மிக்க நண்பு பூண்டிருத்தலைக் கண்டு பொறாமை கொண்ட சம்பந்தாண்டான் அரசனிடத்தில் "யாரொருவர் தாம் உபாசிக்கும் மூர்த்தியைச் சபையில் வர வழைக்கின்றனரோ அவர் மாட்டே நீங்கள் அன்பு கொள்ள வேண்டும்" எனக்கூற, அரசன் விரும்பிய வண்ணம் இருவரும் தத்தம் வழிபடு கடவுளை வரவழைக்க முயன்றனர். சம்பந்தாண்டான் தேவியை வரவழைக்க முயன்று முடியாது போய் வாதில் தோல்வியுற்றனன். அருணகிரியார் அதல சேட னாராட என்னும் இப்பாடலைப்பாடி முருகனை வேண்ட அவர் வேலும் மயிலும் விளங்கச் சபையில் தோன்றித் தரிசனம் தந்தனர். இதன் உண்மை சயில மெறிந்த