பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/881

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 முருகவேள் திருமுறை (7ஆம் திருமுறை அவர்வச மொழுகிக் காசு கேட்கவும் அழகிய மயிலிற் சாயல் காட்டவும் அளவிய தெருவிற் போயு லாத்தவும் அதிபார இளமுலை மிசையிற் று.ாசு நீக்கவும் முகமொடு முகம்வைத் தாகை யாக்கவும் இருநிதி யிலரைத் துார நீக்கவும் இனிதாக எவரையு மளவிப் போய னாப்பவும் நினைபவ ரளவிற் காதல் நீக்கியென் இடரது தொலையத் தாள்கள்காட்டிநின் அருள்தாராய், நெளிபடு களமுற் றாறு போற்சுழல்

  • குருதியில் முழுகிப் பேய்கள் கூப்பிட t நிணமது பருகிப் பாறு காக்கைகள் கழுகாட நிரைநிரை யணியிட் டோரி யார்த்திட

அதிர்தரு சமரிற் சேனை கூட்டிய நிசிசரர் மடியச் சாடு வேற்கொடு பொரும்வீரா, களிமயில் தணில்புக் கேறு தாட்டிக அழகிய கனகத் தாம மார்த்தொளிர் கண்கிரி புய# முத் தார மேற்றருள் திருமார்பா. கரியவ ளகளிற் றேவ பார்ப்பதி யருள்சுத குறநற் பாவை தாட்பணி கருணைய தமிழிற் பாடல் கேட்டருள் பெருமாளே.

  • பேய்கள் ரத்தத்தில் முழுகுவது: 'ஒழுகு உதிரந்தனில் முழுகி எழுந்தன நிருதரை முனிந்த போர்க் களத்தில் அலகையே" - போர்க்களத்தலகை வகுப்பு.

1 மாமிசத்தை உண்பன பருந்து முதலிய. "நளிநாப்பேய் பாறொடு கழுக்கள் கூகைதாமிவை புசிப்ப தான பாழுடல்" - திருப்புகழ் 898 "நரிகள் கங்கு காகமிவை தின்ப தொழியாதே" - திருப்புகழ் 120 + முருகனும் முத்துமாலையும் - தண்டரள மணிமார்ப' - திருப்புகழ் 729, களியவ ணிளையத் தேவி பார்ப்பதி யருள் செய்த குமரக்கீரர் பாட்டியல் கருணைகொடருளிப் பாடல் கேட்டருள் பெருமாளே என்றும் பாடம்