பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/868

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீகாழி) திருப்புகழ் உரை 309 அன்புகூடி மிகுந்தெழும் இப்பேதைப் பெண் மயக்கங்கொண்டு தனித்திருக்கின்றாள்; சங்குகள் உள்ள கடல் மங்கிக் கலங்கின தோற்றம் (விளக்கம்) ததும்பும்படியாக விஷம்போன்று விளங்கும் (விஷாக்கினிபோலச் சுடர்வீசும்) வேலாயுதத்தைச் செலுத்திச் சண்டை செய்த வேளே! சந்தக்கவி நூல் சொல்லும் புலவர்களுடைய சொல்லிற் பிரியம் உடையவனே (சுவை காண்பவனே)! சண்பைப்பதி (சீகாழியில்) வீற்றிருக்கும் கந்தப்பெருமாளே! (பேதை மயங்கித் தனியானாள்) 777. செவ்வானத்து நிலவுக்கும், (இக்கு மாரற்கு) கரும்புவில் ஏந்தும் மன்மதனுக்கும், அ(ல்)ல, இரிபெ திே: அல்ல - தெற்கிலிருந்து வரும் (ஊதைக்கு) ಶ್ದಿ (அல்லது அலத் தெற்கில் ஊதைக்கு - அல் - இரவில் சும் - அத் தெற்கில் ஊதைக்கு அந்தத் தென்றல் காற்றுக்கும்) அனல் யாத - நெருப்புப்போலச் சுடுகின்ற தன்ம்ை குறையாத (சித்ரவீணைக்கு) ன்பதரமான ஓசையைத் தரும் வீணைக்கும், அலர் வசைமொழி கொண்டதாயர்க்கும், அவ்ச் சித்தம் வாடி வீணான உள்ளிமானது வாட்டம் அடைந்து, (பொது மாதர்க்குக் கொடுக்கப் பொருள்வேண்டிப் பணம் உள்ளவர்களைத் தேடிச்சென்று அவர்கள்மீது) கனக் கவிபாடி - பெருத்த பாடல்களைப்பாடி - (அவர்களை அப் பாடல்களில்). (தை) துதிக்கையையும் (கபோலம்) கன்னத்தையும் உடைய (கிரி) மலைபோன்ற ராவதம் (போலப் பெருமை உடையவர்) என்றும், (பொன் 纜 பொன் சேரும் (ரிாசி) அதிர்ஷ்டம் உள்ளவர் என்றும், (அல்லது - கைக்க - போல - அலங்கரித்த துே L/fTGl) அலங்கள்ரவகையில் - தித்து (கிரிப்பொற் கொள் ராசி) பொன் ராசி ', ' பொற் குவியலைக்கொண்ட கிரி (மேருமலை) என்றும், கொடையில் (ஈதலிற்) பேர்போன கற்பக விருக்ஷம் என்றும், செகத்ரயபாது (லோகம் மூன்றிலும் விள்ங்கும் சூரியன்) என்றும்,