பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/848

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீகாழி திருப்புகழ் உரை 289 வில்லைப் போன்ற நெற்றி, கயல்மீன் போன்ற கண், செம்மைவாய்ந்த சொல் - இவைதமை உடைய ே தேவி, (திரிபுரை) _. ம்மூர்த்திக மூத்தவள், பயிரவி (பைர்வராகிய ఫే ), சந்திரனைச் §ಿ விளக்கமுற்ற சடையை உடைய பெரியவள், செம்பொன் நிறத்தவள், சிங்கவாகனம் கொண்டவள், கூட்டமான படையாகப் பேய்களை உடையவள், ஒளிபொங்கி மேலெழும் (கோடுகள்) - ஊது கொம்புகள், (திமிலை) ஒருவகைப் பறை, ஒலிக்கின்ற பறை, இவையெலாம் ருந்து ப்ேரொலி மோத எழுப்பச் சிவனுட்ன்ே நடம்செயும் மங்கை, மாது, உமை, என்ற பார்வதி பெற்றிவேளே! (வள்ளிமலைச் சாரலில் (தவஞ் செய்திருந்த) ஒரு முநி (சிவமுநிவர்) பெற்ற மாது - வள்ளியின் மலரன்ன திருவடியை வருடியே நின்று (கால்பிடித்து நின்று), நாள்தோறும், மயில், நெருங்கிவரும் குயில், கிளி இவைகளை (ஒட்டும் தொழிலில்) புதியவனாய் (கடி) கவண்கல் கொண்டு கடிந்து ஒட்டி (வள்ளிக்கு ஆயால் ஒட்டும் தொழிலில்) உதவித் தொண்டு செய்தவனே! மழை கொண்ட மேகங்கள் தவழும் நெருங்கிய கோபுரங்க்ள், மதில், வயல் இவை மேம்பட்டு விள்ங்கும் சீகாழியில் அவதரித்த ஒப்பற்ற கவுண்ய குலத்துப் பிள்ளையே! s தேவர்கள் தம்பிரான்ே (நினதருள் என் மாலை முனிந்திடாதோ) 769. சுவை நிரம்பிய தேன் போல ஊறும் வாயிதழ் ஊறலை உடைய அழகிய மாதர்கள் அணிந்துள்ள நிகரொப்பு இல்லாத ஆபரண மாலைகள் கொண்ட கொங்கையின் மேலே. அழகாக அணிந்துள்ள மேலாடை உடையினாலும், ஆலகால விஷம்போன்ற கண்ணாலும், காம மயக்கம் கொண்டு, காமப்பற்றினால். j H வள்ளியை மகிழ்விக்கத் தானும் ஆயால் ஒட்டினன் போலும் முருகன்; XX மதில் - வயல் - காழியில் மாமதில்சூழ் கடற்காழி" - சம்பந்தர் 2-9-11: வயற்காழி - சம்பந்தர் 1-59-11.