பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 59 படங்களின் வரிசையையும் கூட்டமான புள்ளிகளையும் கொண்ட ஆதிசேடனைப்; படுக்கை-படுக்கையாகக் கொண்ட கச்சபத்து ஆமை உரு எடுத்த திருமால் ஆசைப்பட்டுள்ள (திருமாலின் ஆசைக்கு இடமான) கச்சி நகரில் அழகிய பெருமாளே! (புகழ்ச் செப்பித் திரிவேனோ) 468. குடத்தைப் பற்றுவது போலப் பற்றி (கடம் போன்ற அக்கொங்கையின்) மீதே எண்ணத்தை வைத்து உள்ளம் மகிழ்ச்சியுற்று, மீன்போலும் கண்ணின் அழகையும், இணையாயுள்ள அழகிய கொங்கைகளையும் உடைய மாதர்களின் மதன கலைக்குள் ஆசைப்பட்டு, (அந்த சாஸ்திரங்களை நன்றாகக் கூவி ஒதி, பின்னர் சலித்துப்போய்க், கற்பனைப் பேச்சுக்கும் - பொய் என்னும் மறைப்புத் திரைக்கும் உட்பட்டவனாகி (கற்பனைப் பேச்சும், பொய்யும் பேசி), (அல்லது பொய்க்கடலில் அழுந்தி, அழிந்து இறந்து உயிர் போனால் (உடலை) எடுத்துச், (சுடுகாட்டிற்) போடவேண்டி, விறகுக் கட்டைகளிடையே படும்படி வைத்துத் தெட்ட (முற்றின). தணல் நெருப்பு:தட்ட கொளுத்தி ಾಧ கொளுத்திச் சுற்றத்தார்கள் - பற்று அற்றவர்களாய் (சுடுகாட்டினின்றும்) போவதற்குமுன் இணக்கி (இணங்கி - மனம் பொருந்தி), பத்திமை (பத்தியுடன்), செச்சைப் பதத்தை (வெட்சி மலர்கொண்ட உன் (திருவடியைப்) பற்றுகைக்கு (பற்றி உய்வதற்கு), சொற்றமிழ்க் கொற்றப்புகழ் (தமிழ்ச்சொற் கொற்றப்புகழ்) தமிழ்மொழி (கெர்ன்டு உனது) வீரப்புகழைச் செப்பித் திரிவேனோ செப்பித் திரிவேனோ (சொல்லித் திரியும் பாக்கியம் அமையுமோ)!