பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 55 கனிக்கு (மாம்பழம் - அல்லது மாதுளம்பழம்) பெறவேண்டி திக் அனைத்தும் (திக்குகள் முழுமையும்) . ■ o உலகெலாம்) சுற்றிட - வல்ம்வர, பச்சை-பச்சை நிறமுள்ள கனப்பகதிக்கு (பெருமை வாய்ந்த மயிலின்), இட்ைப்புக்கு - மேல் ஏறி அம்ர்ந்து க்ளிப்புக்கும்.கிழ்ச்சியுடன் ரிவோனே! கலி (கலியுகத்திலும்) ஒப்பு இல் - நிகரிலாத, சலிப்பு அற்று (சலித்தல் இல்லாமல் - மன உவப்புடன்), கதிக்கு.கதியைத்தர (வீட்டின்பத்தைத் தருதற்கு ஒத்திட்ட (ஒத்திட்டுள்ள) உட்பட்டுள்ள இசைந்தெழுந்தருளியுள்ள, எழிற் பெருமாளே - அழகிய பெருமாளே! சத்திப் பெருமாளே.சத்திவேல் ஏந்திய பெருமாளே - (அல்லது அழகிய சத்திசத்தியாம் காமாட்சி தேவிவாழும்) கடற் கச்சிப் பதிச் சொக்கப் பெருமாளே - கடல் போலும் ஒலி பெருகும் கச்சிமாநகரில் அழகிய பெருமாளே! (கழற் செப்பத் திறல் தாராய்) 467. மாமிசத்துடன் அதைப்பற்றியுள்ள ரத்தத்தை இட்டு சேர்த்து இசைக்கு ஒக்க- அந்த ரத்தம் பொருந்துதற்குத் தக்கவாறு உடலிலே பரப்பவைத்து, எலும்புச் சட்டத்தைச் சுற்றிலும், சுவரை வகுத்து எடுத்துச் செப்பு என ஒரு (ஒரு பாத்திரமாக) கட்டி உரு ஏற்படுத்தி புதுக்கு அலங்கரித்த புத்தகத்தில் புதிய அகத்தில் (வீட்டில்)புக்கு-புகுந்து, (ஒர் உடலெடுத்துப் பிறந்து) எனக்குக் கொன்சம் வேண்டும் - உனக்குக் கொஞ்சம் வேண்டும் என்கின்ற ஆசை எனப்படும். சிறைச்சாலையில் (இருக்க) ஒத்து-சம்மதங்கொண்டு இந்தப் பிறப்புக்களிலே பட்டு-பிறப்புக்களை அடைந்து, (உறக்கம் சொப்பனத்து உற்ற) துாக்கம் கனவு இவைகளை அடைந்து மயக்கம் கொண்டும், வேதனை அடைந்தும் ரியாமல் உனது. அழகிய தாமரையாம் திருவடிகளின் திறம் (சார்பைப்) பற்றுகைக்கு பற்றி உய்வதற்கு உய்யும் பொருட்டு அழகை வெளிப்படுத்தும் சொற்களால், உனது நிலைத்த வீரப் புகழைச் சொல்லிச் சொல்லித் திரிய மாட்டேனோ!