பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/603

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வாழ்வான கந்த முந்த மாறாகி வந்த டர்ந்த மாசூரர் குன்ற வென்றி மயிலேறி, மேலாகு மொன்ற மைந்த மேனாடர் நின்றி ரங்க வேலாலெ றிந்து குன்றை மலைவோனே. வேய்போல வுந்தி ரண்ட தோள்மாதர் வந்தி றைஞ்சு வேலூர்வி ளங்க வந்த பெருமாளே.(2) விரிஞ்சிபுரம் (ரெயில்வே ஸ்டேஷன் - வேலூருக்கு மேற்கிற் காட்டுப்பாடி ஜங்ஷ னிலிருந்து 8 மைல். வரகவி - மார்க்க சகாய தேவரருளிய திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ்" என்னும் மிக அருமையான நூல் அச்சிடப்பட்டுள்ளது. "கரபுரி" "கரபுரம்" எனவும் இத்தலத்துக்குப் பெயர் வழங்கும். ஸ்தலபுராணம் உண்டு.) 672. திருவடியை நினைந்திட தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதான *ஒருவரைச் சிறுமனைச் சயனமெத் தையினில்வைத் தொருவரைத் தமதலைக் கடையினிற் சுழலவிட் டொருவரைப் பரபரப் பொடுதெருத் திரியவிட் டதனாலே. "இப் பாடலின் முதல் இரண்டு அடிகள் வேசையர் தந்திரத்தையும் அவரால் வரும் துன்பங்களையும் விளக்குகின்றன. (43-ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி) அழிந்து ஒடுங்க தனது கரும்பு வில்லும் அழகும் குலைபட்டு ஒடுங்க - மன்மதன் பானங்கள் முருகவேளினிடம் வெற்றி பெறாது (காமனது ஐந்தாம் பாணம் அவரைக் கொல்லமாட்டாது பிழைபட) காமன் நாணமுற்று ஒடுங்க - முதல் நாடி - முன்பு - அந்த அணங்கை நாடி - விரும்பிச் சென்று (அவளை மணந்து) வாழ்வு பெற்ற கந்த என்பதும் ஒருவாறு பொருந்தும் முருகவேள் மாலால் உழன்றது: 'குறமானோடு மகிழ் கருத்தாகி...உனது கட்பாணம் எனதுடை நெஞ்சு பாய்தல் காணாது மமதை விட்டாவி யுயவருள் பாராய்" (பாடல் 209)- என வருவனவற்றைக் காண்க காமன் கரும்போடு...ஒடுங்கியது. "காமன்கை மலர்கள் நாண வேடப் பெண் அமளிசேர்வை காண் எங்கள் பழநிமேவு பெருமாளே." - என்ற இடத்திற் காண்க. (பாடல் 179)