44 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திருமகள் கச்சுப் பொருந்தி டுந்தன தெரிவை யிரக்கத் துடன்பி றந்தவள் திசைகளி லொக்கப் படர்ந்தி டம்பொரு கின்றஞானக் கலைகள னைக்கொத் தடர்ந்து வம்பலர்
- நதிகொள கத்திற் பயந்து கம்பர்மெய் கருக f இடத்திற் கலந்தி ருந்தவள் கஞ்சபாதங் கருணை மிகுத்துக் கசிந்து ளங்கொடு
கருது மவர்க்குப் பதங்கள் தந்தருள் # கவுரி திருக்கொட் டமர்ந்த இந்திரர் தம்பிரானே. (13) 464. அறிவைப் பெற தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தததத தனநத தநதன தனதன தத்தத் தனந்த தந்தன தனதான Xதலைவலை யத்துத் தரம்பெ றும்பல புலவர் மதிக்கச் சிகண்டி குன்றெறி தருமயில் செச்சைப் புயங்க யங்குற வஞ்சியோடு
- கம்பை நதிக்கரையில் தேவி மணலால் இலிங்கம் தாபித்துப் பூசிக்கும்போது, தேவியின் பூசையில் மகிழ்ந்து சிவபிரான் தேவியின் அன்பைச் சோதிக்க வேண்டிக், கம்பை நதியில் வெள்ளம் பெருகச் செய்தனர். லிங்கத்துக்கு ஊறு வருமென அஞ்சித் தேவி லிங்கத்தை இறுகத் தழுவ அவள் தவத்துக்குக் குழைந்து இரங்கி வெள்ளத்தை இறைவன் தடுத்தனர். அங்ங்ணம் தழுவினதால் லிங்கத்தில் தேவியின் வளைத் தழும்பும் கொங்கைத் தழும்பும் பதிந்தன. பின்னர் தேவி வேண்டின வண்ணம் தேவியை இறைவன் மணம் செய்து கொண்டனர் இது கவுரி கல்யாணம்' என வழங்கும். இதன் விரிவைக் காஞ்சிப் புராணம் தழுவக் குழைந்த படலத்திலும் பெரிய புராணம் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்திலும் காணலாகும். 460 ஆம் பாடல் உரைக் குறிப்பையும் பார்க்க
1 தேவி இடப்பாகம் பெற்றது. பாடல் 301-பக்கம் 246 கி. ழ்க் குறிப்பு. # கவுரி திருக் கொட்டு என்றதனால் இந்தத் திருப்புகழும் அடுத்த பாடலும் காஞ்சி காமாகதி அம்மை திருக்கோயிலில் உள்ள முருகவேளுக்கு உரியனவாம் என்க. கொட்டு கோட்டம் : அம் ஈறு கெட்டு முதல் குறுகிற்று கோட்டம் கோயில் கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும் " -சிலப்பதி14-10 காமக்கோட்டி கந்த புராணம் திருநகரம் 78. Xதலைவலையம்-முதல்எல்லை-முதல்வகுப்பு