பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 381 600. சிரித்துப் (பற்களின் யைச்) சங்கின் எனவம் విశra'*'; ಕ್ಲೆ: லும்படி :: (அதனால் காண்போரது மனத்தை) உருக்கி, கொங்கை கொண்டு மேலே பொருந்த விழுகின்ற அந்த செணத்தில் (அந்த கூடிணத்திலே - பொழுதிலே), (விலைக்) காசு பறிக்கின்றவர்கள், சில பேர்வழிகளைச் (சிமிட்டிக் கண்களினால்) கண்ணைச் சிமிட்டி (உறவே மயல் புகட்டி) அழுத்தமாகக் காமத்தை உட்புகுத்தி (ஊட்டி), செவ்விய (தமது) ஆடையால் வெளித்தோன்றவே (பகிரங்கமாகவே) இடையைச் சீர்ப்படுத்திப், (பண்) இசைப்பாட்டுக்கள் குழல்போல இனிமை பொருந்த, (முகில்) மேகத்தை (க் கண்ட) ; மயில் போல (அல்லது, மேகத்தை நீங்கின மயில்போல) (தமது) அருமையைக் காட்டி, ஒழுங்காக, ஆடையாற் கொங்கையை மறைத்து, செவ்விய பவளம்போன்ற வாயிதழின் அமுதன்ன ஊறல்களைக் குடிக்கத் தந்து, அழகிய குயில் என்னும்படி குரல் எழக் கண்டத்தில் ஒசையை அசையச் செய்து, கூந்தலையும் காதோலைகளையும், நிறைந்த அணிகலன்களையும் செப்பம் செய்து ஒளிபெறச் செய்து, சந்தனத்தின் நறுமணக் கலவையுடன் அலங்கரித்துப், பஞ்சு மெத்தையின்மீது சேர்கின்ற மாதர்களின் உறவு கூடலாமோ (கூடலாகாது என்றபடி) ஒலிடும் ஒலியுடன் முன்பு அமராவதியில் இருந்த தேவர்கள் (மேருமலையில்) ஒளித்துக் கொண்டிருந்து "கந்த சுவாமியே! மேலாம் பொருளே! (எங்களைக் காப்பது) உன் பாரம்" என்று முறையிட, (பட்டு என்கிரி) அஷ்டபர். வதங்களும் (பட்டு) - பொடிபட்டு ஏழுகடல்களில் துாள்பட, அசுரர்கள் இறந்துபட, சிங்கங்கள் . பூட்டப்பட்ட தேர்கள், ர்ைகள், யானைகள், மிகுதியாய் நெருக்கமாய் வந்த சந்நிறத்த கழுகுகள், (ஒரிகள்) நரிகள் (கூளியோடு) பேய்களோடு ரத்த வெள்ளத்தில் விள்ையாட வேலாயுதத்தைச் செலுத்தினமயில்வீரனே!