பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

814 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வேடைகெட வந்து சிந்தனை மாயையற வென்று துன்றிய வேதமுடி வின்ப ரம்பெரு ாருள்வாயே! *தாடகையு ரங்க டிந்தொளிர் மாமுனிம கஞ்சி றந்தொரு தாழ்வறந டந்து திண்சிலை முறியாவொனள். ஜாநகித னங்க லந்தபின் t ஊரில்மகு டங்க டந்தொரு தாயர்வ சனஞ்சி றந்தவன் மருகோனே, # சேடன்முடி யுங்க லங்கிட X வாடைமுழு தும்ப ரந்தெழ தேவர்கள்ம கிழ்ந்து பொங்கிட நடமாடுஞ்: சீர்மயில மஞ்சு துஞ்சிய 0சோலைவளர் **செம்பொ னுந்திய பூரீபுருட மங்கை தங்கிய பெருமாளே. (1) தாடகையைக் கடிந்தது. யாகத்தைப் புரந்தது. வில்லைமுறித்தது சீதையை மணந்தது பாடல் 431-பக்கம் 582 கீழ்க்குறிப்பு 1 தாய் சொற்படி மகுடம் துறந்தது. பரதனே ஆளவேண்டும். நீ பதினான்கு வருடம் காட்டிற் காலம் கழிக்க வேண்டும். இது அரசன் சொன்னது என்று கைகேயி ஆ. ராமருக்கு உரைத்தபோது, அவ் வாசகத்தைக் கேட்ட ஆரீ ராமரின் திருமுகம் - அப்பொழு தலர்ந்த செந்தா மரையினை வென்ற தம்மா' என்றார் கம்பர். (கைகேசி சூழ் 108. தாயே ! அரசன் பணியே இல்லாது உன் பணியா யிருந்தாலும் நான் மறுப்பனோ' என்றாராம் பூரு ராமர். "மன்னவன் பணியன் றாகி னும்பணி மறுப்பனோ என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்ற தன்றோ என்னினி யுறுதி யப்பால் இப்பணி தலைமேற் கொண்டேன் மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்" 輩 (கம்பராமா. கைகேசி சூழ் 110). # மயில் நடமாட சேடன்முடி கலங்குவது: 'சேடன்முடி திண்டாட ஆடல்புரி...மயில்" - மயில் விருத்தம் 2. X மயிலின் வேகத்தால் காற்று பரவுதல் 'வாசி விசை கொண்டிட வாகனப் பீலியின் கொத்து அசைபடு கால் பட்டசைந்தது மேரு' - கந்தரலங்-11. (தொடர்ச்சி 815 ஆம் பக்கம் பார்க்க)