பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

718 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அமரர டங்கலு மாட்கொள அமரர் த லங்குடி யேற்றிட அமரரை யுஞ்சிறை மீட்டருள் பெருமாளே (7) நெருவூர். (கருவூர் ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து 6 மைல்) 934. திருவடி மறவேன் தனன தனதன தனதன தனதன . தனன தனதன தனதன தனதன ■ தனன தனதன தனதன தனதன தனதான குருவு மடியவ ரடியவ ரடிமையு மருண மணியணி கணபன விதகர குடில "செடிலினு நிகரென வழிபடு குணசிலர் குழுவி லொழுகுதல் தொழுகுதல் விழுகுதல் அழுகு தலுமிலி நலமிலி பொறையிலி குசல கலையிலி தலையிலி நிலையிலி விலைமாதர் f மருவு முலையெனு மலையினி லிடறியும் அளக மெனவள ரடவியில் மறுகியு மகர மெறியிரு + கடலினில் முழுகியு முழலாமே. Xவயலி நகரியி லருள்பெற மயில்மிசை யுதவு பரிமள மதுகர வெகுவித வனச மலரடி கனவிலு நனவிலு மறவேனே,

  • செடில் - பிரார்த்தனைக்காக முதுகின் தோலில் கொக்கியைச் செலுத்தி அந்தக் கொக்கியை அதற்கென நாட்டப்பெற்ற நீண்ட கழையில் மாட்டி ஒருவனைத் துாக்கியாட்டுங் கருவி.

f சிகளியூடு தேமாலை அடவியூடு என்றார் முன்னும் (பாடல் 916 அடி2).

  1. கடல்-கண்-கடல்போற் கணை விழி பாடல் 909,

x இது அருணகிரியாரின் வரலாற்றை அறிவிப்பது அவரது நன்றி மறவாமையையும் விளக்குவது.