பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

640 முருகவேள் திருமுறை (7ஆம் திருமுறை ஏதமயல் காட்டு மாதர்வலை காட்டி மீடழிதல் காட்ட லமையாதோ: *வீரவப ராட்டு ஆரர்படை காட்டில் வீழனலை யூட்டி மயிலுTர்தி. t வேலையுறை நீட்டி #வேலைதனி லோட்டு வேலைவிளை யாட்டு வயலூரா; சேரமலை நாட்டில் வாரமுடன் வேட்ட சிலிகுற வாட்டி П0or Tal/ Пта пт Птதேசுபுகழ் தீட்டி யாசைவரு கோட்டி தேவர்சிறை மீட்ட பெருமாளே.(2) 906. சிவ அறிவுவரக் காத்தருளுக தனதனன தனதனண தத்தத்த தத்ததன i. i. i. e. e. | || - - - - * * தந்ததான இகல்கடின முகபடவி சித்ரத்து திக்கைமத மத்தக்க ளிற்றையெதிர் புளகதன மிளகஇனி தெட்டிக்க முத்தொடுகை கட்டிப்பி னித்திறுகி யிதழ்பொதியி னமுதுமுறை மெத்தப்பு சித்துருகி முத்தத்தை யிட்டுXநக தந்தமான

  • வீர அபராட்டு அபரம் - எதிர் ஆட்டு - வல்லமை t வேலுக்கு உறை - ஆயுதக்கூடு உண்டென இதனால் தெரிகின்றது. # வேலையில் வேலை விட்டது. கடல் சுவற வேலை விட்ட திருவிளையாடல்: (முருகவேள்) உக்கிர பாண்டியராய் அசுவமேதம் தொண்ணுற்றாறு செய்தபொழுது இந்திரன் பொறாமைகொண்டு வருணன் நோக்கி நீ கடலாய் உருத்துச் சென்று மதுரையை அழிப்பாயாக என்றான். வருணனும் அங்ங்ணமே கடலை மதுரைமேற் பொங்கிவரச் செய்தான்; உக்கிர பாண்டியருடைய கனவிலே இறைவன் தோன்றி உனது வேற்படையை எறிந்து வெற்றிகொள்' என்றனர். (இவ் வேல் சிவபிரான் உக்கிர பாண்டியனுக்கு அளித்தது); பாண்டியனும் அவ்வாறே அந்தவேலைப் பொங்கிவரும் கடல்மீது செலுத்தக் கடல் கஃறென வறண்டு கால் மட்ட அளவுக்குச் சுருங்கி நின்று அடங்கிற்று.

"கருங்கடல் பொரிய ஒருங்குவேல் விடுத்த அதற்கருள் கொடுத்த முதற்பெரு நாயகன்" - கல்லாடம் 75 (தொடர்ச்சி 641 ஆம் பக்கம் பார்க்க)