பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/974

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . ஞானமலை திருப்புகழ் உரை 501. உடல் தேய, சூரியனுக்கு உள்ள பற்கள் உதிர, (யாகப்) தடுத்து)ப் ப்ொடியாக்கும் தி (அக்கினியின்) கை அற்றுவிழ, முதன்மையான் தக்கப்பிரசாபதியின் தலை அற்றுவிழ, நல்ல சரசுவதியின் மூக்கு அறுபட்டு நழுவி விழ, (அங்கு) வ்ந்திருந்த திருமால் ஒட்டம் பிடிக்க அந்த யாக சாலையில் நின்று, போர் விள்ைத்து, (அங்கிருந்தவர்களை) வைது (திட்டி) கோப உங்காரத்தோடு ஆரவாரஞ் செய்யப் பேய்க்கூட்டங்கள் கூடி வென்று ஆடின. அந்த (யாக) சாலையை விட்டு (நீக்க - விலக்க). (அல்லது) (யாவரையும்) வெளியே நீக்கினவனான சிவனும், முனிவர்களும் வந்து (சேயே) என்றும் 'ஈச என்றும் போற்றி, அன்பின்பாற்பட்ட (அறம், பொருள், இன்பம், வீடு) என்னும் (நால்வகைப்) புருசார்த்தங்களின் விளக்கக் காட்சியைத் தா (தந்தருளுக) (ஒதி அருளுக) என வேண்டின கேள்வி நெறியின் (விசாரணை செய்த நல்லொழுக்க நெறியின்) புகழைக்கொண்ட ராசகெம்பிரவள நாட்டு மலையில் விளங்கும் தம்பிரானே! (பரமார்த்த தரிசனை வந்து தாராய்) ஞானமலை 391 சூதும் கொலையும் செய்பவர்கள், ஆசை பணத்திற் (பணத்தில் ஆசை) கொண்ட மாதர்கள், மாமிசம் உண்பவர்கள், ர்த்தக் குறைவால் முகம் வெளுத்த விடமிகள், சூலைநோய், வலி, வாதநோய் - இவைகளோடு சம்பந்தப் படுபவர்கள் (கலப்பவர்கள்). பாபிகள், (சூதகத்தால்) பரிசுத்தம் இல்லாதவர்கள், கோள் சொல்பவர்கள், ಫ್ಲಿ காரியம் சாதிக்கைக்கு வேண்டிய அழுத்தமான (பொய்ப்) பேச்சுக்களைப் பேசி, வாரும் என அழைத்து, நாழி நேரம் (தங்களுட்ைய) பாண்டத்தின் (உடலின்) லைத்திட்டம் (விலைக்கூறு) இது என்று சொல்லி