பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 77 வினை (மிக்க) சண்டாளனை, வீணனை, பெரும் பொருளைப் பெற்றதனால் ஆணவம் கொண்ட முழுமூடனை, மாமிசத்தை ஆண்சியுடன் உண்ணும் பர்ழ்iன்வனை, (நேர்மையான) ஒரு சொல்லைச் சொல்லாமல் மாறுபட்ட பேச்சுக்களையே பேசும் மோக விகாரனை, அற நறியில் ஒழுகாத மூதேவியாகிய என்னை அழைத்து உனது பர்துகையை (பாதரட்சையை) நீ தர நான் பெறும்படியான அருளைப் பெறுவேனோ! முனை (மூக்கை) உடைய சங்குகள் ஒலிக்கின்ற நீலக் கடலை அன்டத்து, அஞ்சுதலில்ல்ாத இராவணனுடைய நீண்ட பல முடிகளும் (விழ) அன்று ஓர் அம்பைச் செலுத்திய ராகவனுடைய மருகனே! முளைக்கும் குளிர்ந்த லாவோடு (வளர்பிறைச் சந்திர்னோடு) பாம்பு, விரிந்து அல்ை (மோதும்) கங்கை நதி, ஆத்திப் பூ வில்வம் (இவைகள்ைச்) சூடும் ருமுடியை உடையவருடைய பேரருளாலே தோன்றிய முருகோனே! தினைப்புனத்திருந்த செவ்விய காட்டு வேடர்கள் திகைப்புற் JT)! "ஹயோ! ఢీ:: அதிசயம்" என்று கூறும்படிய்ர்க வங்கை மரமாய் நின்ற திறல்வாய்ந்த கந்தா1 வ்ள்ளி நாயகியம்மை ஆசைப்படும் அழகு வாய்ந்த வேலனே! சிறந்த தாமரை ஒடையிலும் மேடையிலும் நிறைசூல் (நிறைந்த கர்ப்பம்) கொண்ட சங்குகள் பால்போலும் வெண்மணிகளை (முத்துக்களை) வீசுகின்ற திருச்செந்துாரில் rg#; பராக்ரமசாலியே! தேவர் பெருமாளே! (பாதுகை நீ தர நான் அருள் பெறுவேனோ!) 27 உருக்கமான மொழிகளைப் பேசும் நீலியர் (தந்திரம் உள்ளவர்) க்ாசு பறிக்கும் குற்றம் உள்ளவர், மோக விகாரங் கொண்டவர், உ ட்டிப் பார்க்கும் பார்வையர், மிக்க பழிகாரிகள் - மதிக்காமல் 'நீலியர் - நீலி போன்றவர்; உருக்கம் உள்ளவர்போல நடிப்பவர். நீலி - திருவாலங்காட்டுப் பெண் பேய் - நீலியின் வரலாற்றுச்