பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/852

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . இரத்னகிரி திருப்புகழ் உரை 379 இன்பம் - அழகு முதலிய நலங்களை இழந்து, அறிவுபோய் உணர்வையும் இழ்ந்த நான் நற்கதியை எப்படிப் பெறுவேனோ! மேகங்கள் படியும் தன்மை வாய்ந்த கருங்கடலிற் புகுந்து நின்ற, மாமரம் (சூரன்)'அறுபடும்படி முன்பு (வேல் ஆயுதத் தை விட்டு அடக்கி ஆழ்த்தும் (ஆற்றில்ோடு) சண்டை செய்து தேவர்களுக்கு இருந்த துக்கம் அவர்களை விட்டு நீங்கச் செய்த் புகழைப் பெற்றவனே! இவற்றியைத் தரும் அழகிய முத்தமிழ்ப் (பாக்கள் மூலமாக) வெளித்தோன்றும்_சிறந்த மந்திரங்கள்ையும் மேலாம் பொரு ளையும் அநுபவித்து உல்குக்கு (அன்வைதமை) அ 凸 செல்வமே! சிவதைப்பதி (சிவாயம் எனப்படும்) ரத்தினகிரியில் (திருவாட்'போக்கியில்) விளங்கும் உண்மை வடிவாம் குமரப் பெருமாளே! (நற்கதி எப்படி பெற்றிடுவேனோ) 348 ழ்ந்துள்ள வஞ்சனைகள் பலவும், சூது நிறைந்த தொழில்கள் பலவும், (கொண்டு) கற்ற கள்ளத் தொழிலோடு பழிக்கு இடம் தருபவர்கள், கொலைகாரர்கள், (இவர்களுடன் கூடிச்) சலிப்புற் அலைந்து வீணான பெருமையோடு (வாழ்க்கைக்) கடலில் முழுகி, அதில் உண்டாகும் துன்பங்களை அடைந்து- - E. துக்கந் தரும் சமுசாரம் என்னும் கடலில் மீன்போல அலைந்தும், கூழில் ந்த குப்பைபோலக் கிடந்தும், மூண்டு எரியும் பெரிய நெருப்பிற்பட்ட மெழுகுபோல (உருகும்) உடல், சுத்தம் என்பதையே அறியாத (அழுக்கு மெய்யான) பாரம் வாய்ந்த உடல் இத்தகைய உடலிற் பொருந்தி வேலை செய்யும் - (மெய், வாய், கன், மூக்கு, செவி) என்னும் இந்திரியங்களால். (முன் பக்கத் தொடர்ச்சி) t ரத்தின வெற்பு, அரதனாசலம், சிவாயம் என்பன வாட் போக்கித் தலத்தின் பிற பெயர்கள், சிவதைப்பதி - சிவாயம் (திருப்புகழ் 1304 பார்க்க) " சடைவிராய விருப்புச் சிவாயமே சங்கரற்க விருப்புச் சிவாயமே" வாட்போக்கிக் கலம்பகம் 65. (இருப்பு. உச்சி வாயம் - நீர் (கங்கை); விருப்பு. சிவாயம் என்னும் தலம்)