பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/712

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 239 நிலை காண முடியாத சமுத்திரம் இ என் சொல்லத்தக்க சமுசாரம் என்கின்ற நீர்த் ఉదా: .# உண்மை பேசுகின்றேன் எனக் கூறிப் பலவும் பேசி - அத்தகைய வாழ்வில். பலநாள் உழைப்பு உள்ளதாகி (உழைத்து), பெரியோர்கள் உள்ள இடத்திற் (கலவாது) மறைந்து (ஒளித்து), (உண்மை) நினைப்புடனே உனது திருவடிக்கு உண்ட்ான (திருப்) பணிகளை விரும்பிப் போற்றி செய்யாது (அன்புடனே பாராட்டாமலும், செய்யாமலும்) மிகப் பலமான உடல் நோய்களில் ஊறி, பிறவி நோய் என்கின்ற அலைச்சல் ಕ್ಲಿಕ್ಗಿ அநுபவித்துக், கோபம் கொண்ட பயித்தியக்காரனாகித் தடுமாற்றங் கொண்டு தவியாமலும், (நமக்குப்) பிறப்பு ஏன் வந்தது என அதன் மூலகாரணத்தை ஆய்ந்து, அந்தப் பிறப்பின் வேரை (வேராகிய ஆசையை) அறுத்து, உன்னைப் புகழ்ந்து ஒதி, இப்பூமியில் நான் பிழைத்து வாழுமாறு உனது திருவருளைத் தந்தருளுக. கலியாண மாப்பிள்ளையாக, குறமாது வள்ளிக்கு அற்புதமாய் வாய்த்து அவளுடைய அழகு நிறைந்த புயங்களை அணைத்துத் திளைத்து விளையாடி மகிழ்ச்சி கொள்ளும் உன்னை (எனக்கு உற்ற) துணையாகத் தேடுகின்ற அடியேனைச் சுகப்படுமாறு வைத்தருளுக! இது உனக்குக் கடமையாகும், இது பெருமையும் ஆகும் முருகனே! பல முறையும் உன்னைத் தொழுபவர்கள் மறவாது (உனது) திருப்புகழையே கூறி (இந்தப் பூமியில் (உன்னைத்) துதி செய்திருந்து வாழ்வதற்கு அருளும் (செவ்)வேளே! (அல்ல்து, வாழ்வதற்கு அருள் புரிவாயாக (செவ்) வேளே! தலமாகிய (உனது) திருத்தணி, (யாவரும்) விரும்பும் சிவலோகமே ஆகும் என்று (அல்லது நீ வாழும் சிவலோகமே என்று), அத்தல்த்தின் மீது ஆசை கொள்ளும் பெருமாளே! பிறப்பு நோய் (அணுகாவ்கைக்கு) வயித்தியம் (செய்யவல்ல) தலைவனே! பெருமாளே! (தல மீதில் பிழைத்திடவே நின் அருள் தாராய்)