பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/611

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 254. முத்தி பெற தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனதான கனத்தறப் பனைத்தபொற் கழைப்புயத் தனக்கிரிக் 'கனத்தையொத் துமொய்த்தமைக் குழலார்தங். கறுத்தமைக் கயற்கணிற் கருத்துவைத் தொருத்தநிற் கழற்பதத் தடுத்திடற் கறியாதே; இனப்பிணிக் கணத்தினுக் கிருப்பெனத் துருத்தியொத் திசைத்தசைத் தசுக்கிலத் தசைதோலால், எடுத்தபொய்க் கடத்தினைப் பொறுக்குமிப் பிறப்பறுத் தெனக்குநித் தமுத்தியைத் தரவேணும்; t பனைக்கரச் சினத்தியத் தனைத்துரத் தரக்கனைப்

  1. பயத்தினிற் பயப்படப் பொரும்வேலா .

பருப்பதச் செருக்கறத் துகைக்கு S முட் பதத்தினைப் படைத்தகுக் குடக்கொடிக் குமரேசா. திணைப்புணப் பருப்பதத் திணிற்குடிக் குறத்தியைச் செருக்குறத் திருப்புயத் தனைவோனே. கனம் - மேகம். கனத்து அறப் பணைத்ததைப் புயத்துக்கும் தனத்துக்கும் கொங்கைக்கும்) கூட்டலாம். "அகலல்குல் தோள் கண்ணென மூவழிப் பெருகி, நுதலடி துசுப்பெனமூ வழிச் சிறுகி" கலித்தொகை - முல்லை . 8 வீங்கு முலையாகத்து வாங்கமைப் பணைத்தோள் பெருங்கதை 14 - 7.218. t பனைக்கரச் சினத் திபத்தன் - தேவேந்திரன். யானையின் துதிக்கை பனைக்கு ஒப்பு - 'பனைக்கை மும்மத வேழம்". அப்பர் V 2.1. பனைக்கை. கஜக்கடவுள் - வேல் வகுப்பு.

  1. பயம் (சமுத்திரமாகிய) ஜலம்.

S முள் போன்ற துணிகளை உடைய காலே ஆயுதமாகக் கோழி சண்டை செய்வதால் - கோழிக்குக் காலாயுதம் என்ற ஒரு பெயர். சேவலின் ஆற்றலைச் " சேவல் சிறகடிக் கொள்ள குன்றமும் மா மேரு வெற்பும் இடிபட்டவே" (கந் அலங்-12) என்றார். அடுத்த பக்கம் பார்க்க