குன்றுதோறாடல்) திருப்புகழ் உரை 89 பாண்டியர்கள் போற்றி வளர்த்த தமிழில் ஒப்பற்ற (அகப்)பொருள் இலக்கணத்தைச், (சங்கப் புலவர்கள்) வழிபட (வணங்கி வேண்டி நிற்க) ஆய்ந்து உரைத்த (விளக்கிய) முருகேசனே! (உனது) மலரடியைப் பணியும் (இந்த) மடமகள் (மடப்பம்-அறியாமை கொண்ட மகள்) காமத்தால் உற்ற நிறவேறுபாட்டுடன் மோக மயக்கத்தால் தளர்வது (இளைத்துப் போவது) அழகோ (நியாயமோ)! முழுகிய நீரில் (நீரில் முழுகி) கூட்டமான மணிகளையும் முத்துக்களையும் கொடிபோற் பின்னிய பவளங்களையும் நிரம்ப வாரி - o (வாங்குங்கள் என்னும்) முறையீட்டோடு குறப்பெண்கள் சொரிகின்ற முதுகிரியில் (விருத்தாசலத்தில் உறைகின்ற) அழகனே! குருநாதனே! " (என்னுடன் ) கூடவே பழகி வருகின்ற வினைகள் (எல்லாம்) பொடிபடும்படி, (உனது) திருஅருளில் (மனம்) தோய்பவருடைய (அல்லது திரு அருளுக்குப் பாத்திரமானவர்களுடைய) உள்ளத்தில் வீற்றிருக்கும் தலைவனே! பருத்த (கிரெளஞ்ச) மலை துணிபடும்படி ஒப்பற்ற ஆயுதத்தை தெரிந்தெடுத்துச் செலுத்தினவனே! ᏞJ☾u) மலைகளுக்கும் அதிபனாயுள்ள பெருமாளே! (மயல் கொடு தளர்வது அழகோ தான்)