பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம்) திருப்புகழ் உரை 63 222 பூரண சந்திரன் முபான்ற முகத்தின் ஒளியினாலும் ...” வழிகாட்டியாயுள்ள கண் அம்பு செய்யும் போரினாலும் உறவு பூன்கின்ற மாதர்களின் உறவு ஆமோ (கூடாது என்றபடி) உன்னுடைய திருவடிகளை உனது இருஅடி (இரண்டு பாதங்களை) இனித் தந்தருளுக; வேதங்களிற் சொல்லப்பட்ட திருமாலின் அழகிய மருகனே! (அல்லது திருமால் இலக்குமி இவர்களின் மருகனே!) பகைவர்களாம் அசுரர் குலத்துக்கு குலத்தை அழித்த) | காலனே! | குறமகள் வள்ளியை) மணஞ்செய்து அருளியவனே! குருமலை (சாமிமலையில்) வீற்றிருக்கும் பெருமாளே ாகிகவடி யினி அருள்வாயே) 223 பரவிப் போற் றுத்ற்கு அரிய மலை யென்னும்படி பரந்துள்ள பெரிய கொங்கைகளின்மேல் அலங்காரமான ஆபரணங்கள் விளங்க, நூல் போலும் இடை சாயும்படி ஒழுகுபவருடைய, வாள் போன்ற (ஒளி விளங்கும்) கண் எனும் வேல் மீதும், H பரந்து வண்டுகளோடு கூடியதாயுள்ள கூந்தல்களின் புது மலர் மீதும், வரிசையாய் விளங்கிப் புன்சிரிப்பைக் காட்டும் பற்கள் மீதும், சந்திரனைப்போன்ற முகத்திலும், எழுகின்ற அதிக மோகம் நிலை பெற்று என் மன்த்தில் தோன்றுவதால் (நான்) அலைச்சல் படலாமோ!