பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 முருகவேள் திருமுறை (3- திருமுறை அரிய புகழை யமைத்த பெரிய பழநி மலைக்கு ளழகு மயிலை நடத்து பெருமாளே (89) 189. திருவடி மறவாமை தனதனன தனதனன தனதனன தனதனன முருகுசெறி குழலவிழ முலைபுளக மெழநிலவு முறுவல்தர விரகமெழ அநுராகம். முதிரவச மறவிதரி யெழுகைவளை கலகலென முகநிலவு குறுவெயர்வு துளிவீச, அருமதுர மொழிபதற இதழமுது பருகிமிக அகமகிழ இருகயல்கள் குழையேற. அமளிபடு மமளிமல ரணையின் மிசை துயிலுகினும் அலர்கமல மலரடியை மறவேனே, நிருதனொடு வருபரியு மடுகரியும் ரதநிரையும் நெறுநெறென முறியவிடும் வடிவேலா நிக ழகள சகளகுரு நிருபகுரு பரகுமர நெடியநெடு ககனமுக டுறைவோனே; வருமருவி நவமணிகள் மலர்கமுகின் மிசைசிதற மதுவினிரை பெருகு rவளி மலைமீதே. வளர்குறவர் சிறுமியிரு வளர்தனமு மிருபுயமு. மருவிமகிழ் பழநிவரு பெருமாளே (90) அகள சகள குரு நிருப - அருவ மாகியும் உருவ மாகியும் உள்ள குரு ராஜனே. t வளிமலை - வள்ளிமலை.