பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 341 கருடனுடன் போட்டியிடுவது போல உயரத்திற் பறக்கும் கொடிகள் பிர்காசிக்கும் மதிலும், பெரிய மர்ட மேடைகளும், விளங்குகின்ற கலிசை என்னும் ஊரில் உள்ள காவேரி சேவகனோடு அன்பு பூண்டவ்னே! கடலிடையே இருந்த பாதக அசுரர்கள் விழுந்து கதறவும், இந்திரன் தனது உள்ளத்து எண்ணம் ப்லித்த தென்றே செல்லவும், மயில்மேல் எழுந்தருளி வந்த குமரேசனே! பல மலர்களைத் துளவி, வேதங்களை ஒதித் துதித்து, தேவர்கள் சூழ நாள்தோறும் மகிழ்ந்து பழநிமலை மேலே ஒப்பற்ற ப்ர்ாபரன் (சிவபிரான்) வணங்குகின்ற பெருமாள்ே! (பிறவிதனிலே - உழன்று திரிவேனோ) 147 சிறு பறையும், ரசும், ம், சத்தம் செய்கின்ற பறையும், 薇.燃 ಶಿ Χ 鷲 (யழதுாதர்கள்) எட்டிப் பிடித்துத் (த்லை) முடியைச் சிறிய (பாசக்) கயிற்றால் ந்ெடுநேரம் கட்டி இழுக்க, இனிப் (பிழைப்பது அரிது - பயனில்லை என்று கருதி)துாரத்திலிருந்தே - சில உறவினர்கள் . சுற்றத்தார்கள் கூச்சலிட்டுப் பிதற்றி (உடலை) எடுத்துக் கொண்டுபோய்ச் சுடலையில், வைக்க வேண்டிய தீயை வைத்துக் கொளுத்திய (பின்பு), நீரில் - அலை வீசும் கட்லில் முழுகுங்கள் எனச் சொல்லும் படிக்குள்ள இவ்வுடல் எடுத்தல் நீங்காதோ! வேதநூல்களில் முடிவாகச் சொல்லப்பட்ட் நிலையாம் முத்தி பெறுதற்குச் சொல்லிய வழிப்படி, உடலும்-உயிர்களும், இந்திரியங்களும் பரவெளியிற் சம்பந்தப்பட்டு, (அதனால்) முக்குணங்களும் வழிப்பட்டு ஒழுக, உன அடிமையாகிய எனக்கு (உன்மீது) இச்சை வரும்படி (நீ) என்னை ஆண்டருளும் ஒரு நாளுங் கிடைக்குமோ! நீ ஏறி வரும் குதிரையாம் மயில், மணிகள் சத்தம் செய்யும்படிநடனம் செய்ய, ஒரு பத்துடன் இரண்டு (பன்னிரண்டு) புயங்களும் மண்ம் கமழும் மாலைக்குப் பொருந்தி விளங்க், மனம் மகிழ, இனிய மொழியைக் கூறி, (உனது) சிவந்த பாதங்களை அருள்வாயே!