பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி! திருப்புகழ் உரை 307 தேவர் வருத்தமும் அசுரர் உடலும் அழியும்படி போர் செய் தருளிய்வ்னே! அறமும் நிறமும் வேலும் மயிலும் அழகும் உடைய பெருமாளே! (அறிவு தரவேணும்.) 131 இருண்ட கடல் போன்றதும் , நரகத்துக்கு ஒப்பானதும் ஆன பிறப்பு என்பதில் 鷲。 னை) செய்தால் செவிடு, குருடு, உறுப்புக் குறைவு, சிறிதேனும் வறுமை என்பன (என்னை) அணுகாதபடியும் - தேவர்களுக்கு உள்ள உருவ லட்சணமும், உயர்ந்த குடிப்பிறப்பும், அறிவும், நீதி ஒழுக்கமும் எனக்கு வருமாறு உனது - திருவருளைப் பாலித்து, என்னையும் (நீ உனது மனம் வைத்து அடிமை இகாள்ளு வந்தருளவேனும், (அல்லது) என்னையும் (ஒரு நிலையில் ல்லாத என்) மனத்தையும் (உன் வசப்படுமாறு) அடிமை கொள்ள வந்தருள வேணும்; போர் : வெல்லப்பட்ட அசுரர்களின் தலைகள் உருள, கவும் பெரிய கடல் அலறும்படி, நீண்ட (கிரெளஞ்ச) மலை பொடியாகும் படி வேலைச் செலுத்தியவனே! கொடிய (அல்லது விரும்பத்தக்க) பாம்பணையில் இனிமை யுடன் ఎఫీ ல் கொள்ளும் தாமரைக் கண்ணனது (திருமாலின்) மருகனே! கண்டங் கறுத்த சிவபிரானின் குமரனே! பழநியில் வந்து பரவும் தேவர் தம் பெருமாளே! (அடிமை கொளவும் வரவேணும்.) 131-1 கூந்தல் சரிய, மொழிகள் பதற, கண்கள் உலவிக் கொலைத் தொழிலைக் காட்டக், கள்வு எண்ணத்துடன்