பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 முருகவேள் திருமுறை 13- திருமுறை பிணிபட் டுணர்வற் றவமுற் றியமற் பெறுமக் குணமுற் றுயிர்மாளும் பிறவிக் கடல்விட் டுயர்நற்கதியைப் பெறுதற் கருளைத் தரவேணும்: கணிநற் சொருபத் தையெடுத் துமலைக் கணியைக் கணியுற் றிடுவோனே. கமலத் தயனைப் ப்ரணவத் துரையைக் கருதிச் சிறைவைத் திடுவோனே பேணியப் பணியப் பரமர்ப் பரவப் பரிவுற் றொருசொற் பகர்வோனே. பவளத் தவளக் கணகப் புரிசைப் பழநிக் குமரப் பெருமாளே.(25) 125. பெண்களின் இணக்கம் அற தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனணத் தனதான இருசெப் பெனவெற் பெனவட் டமுமொத் திளகிப் புளகித் திடுமாதர். "இடையைச் சுமையைப் பெறுதற் குறவுற் றிறுகக் குறுகிக் குழல்சோரத்; தருமெய்ச் சுவையுற் றிதழைப் பருகித் தழுவிக் கடிசுற் றனைமீதே 'சருவிச் சருவிக் குணகித் தனகித் தவமற்றுழலக் கடவேனோ, 1. கணி-கண்ணி-கருதி. 2. பணி அப்பு அணி அப் பரமர். 3. இடையைச் சுமை இடைக்கு அழகிய சுமையாகவுள்ள ஸ்தனம். 4. சருவி. சரசஞ் செய்து,